districts

img

பொங்கல் விடுமுறை: சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

உதகை, ஜன.17- காணும் பொங்கலை முன்னிட்டு நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற் றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் விடுமுறை ஒட்டி அனைத்து சுற்றுலா தளங்களும் கலைக்கட்டியுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை கோத்தகிரி உள்ளிட்ட பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணி கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.  பொங்கல் பண்டிகை மூன்றாவது நாளான  காணும் பொங்கல் முன்னிட்டு குன்னூர் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற் றுலா தலங்களில் சுற்றுலா பயணி கூட்டம்  அலைமோதியது. குறிப்பாக சிம்ஸ் பூங்கா வில் பொதுமக்கள் படகு சவாரி செய்து  மகிழ்ந்தனர். அதேபோல்  காட்டேரி பூங்கா, டால் பின்நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட பகுதிக ளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து  காணப்பட்டது. வரக்கூடிய சுற்றுலா பயணி கள் பெரிதும் பயணிக்க ஆசைப்படக்கூடிய நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணி கூட்டம்  அலைமோதியது. வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில்  இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  குன்னூர் பகுதிக்கு வருகை புரிந்துள்ளனர். இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள  அனைத்து சுற்றுலா தளங்களிலும்  பொது மக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களான கோவை குற்றாலம், வால் பாறை, ஆழியாறு, டாப்சிலிப், கல்லாறு போன்று சுற்றுலா தளங்களில் ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். கோவை குற்றாலத்தில்  குழந்தைகள் 644 பேர், பெரியவர்கள் 3 ஆயி ரத்து 326 பேர் என மொத்தம் 3970 பேர் வருகை தந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். இதேபோல் பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பணிகள் அதிகம் வந்திருந்தனர். இதில், திங்களன்று ஒரேநாளில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வழக்கத்தைவிட கூட்டம் அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் அனைவரும், அருவியில் முறையாக குளிப் பதற்கு போதிய வழியில்லாமல் தவித்த னர். இருப்பினும் பலரும், வெகுநேரம் காத்தி ருந்து குளித்தனர். சில சுற்றுலா பயணிகள், அருவியின் ஒருபகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டைபோல் தேங்கியிருந்த தண்ணீரிலும் குளித்தனர். கவி யருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக மாக இருந்ததால், அவர்கள் விதிமீறி அடர்ந்த காட்டு பகுதிக்குள் செல்கின்றார்களா? என்று  வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்ட னர். இதனிடையே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.