விவசாய கிணற்றில் முதலை
மேட்டுப்பாளையம், நவ. 28- விவசாய கிணற்றில் இருந்த முதலையை வனத்துறை யினர் கூண்டு வைத்து பிடித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவரது தோட்டத்தில் உள்ள பாசன கிணறு ஒன்று சுமார் 30 அடி ஆழத்தில் உள்ளது. தனது நிலத்திற்கு மூர்த்தி நீர் எடுக்க முயன்ற போது கிணற்றில் முதலையொன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை வனத்துறையினர் கிணற்றில் முதலை இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அதனை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து ராட்சத மின் மோட்டார் களை கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றப்பட்டு வனத்துறையினர் கொண்டு வந்த கூண்டு கிணற்றில் இறக்க பட்டது. கிணற்றின் அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கும் இங்குமாக கிணற்றில் சுற்றிய முதலை பின்னர் கூண்டில் சிக்கியது. இத னையடுத்து, முதலையை பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர். ஏற்கனவே, பெள்ளாதி தடுப்பணையில் முதலை இருப் பதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில், தற்போது விவசாய கிணற்றில் முதலை பிடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேட் டுப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் முத லைகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பயிர்கள் சேதம்: போராட்டம் நடத்த முடிவு
மேட்டுபாளையம், நவ. 28- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக விவ சாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளையும், காட்டுப்பன்றிகளையும் வனத்துறையினர் வனத்திற்குள் விரட்ட வேண்டும். வன உயிரினங்களால் ஏற் படும் பயிர் சேதங்களுக்கு வனத்துறை உரிய இழப்பீட்டினை தருவதில்லை என்பதால், இனி வரும் காலங்களில் சேதமா கும் பயிர்களை அந்தந்த வனச்சரக அலுவலகம் முன்பு போட்டு காலதாமதமின்றி உரிய இழப்பீடு வழங்க வலியு றுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது, யானை வழித்தட பாதையில் சோலார் மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை பறிக்க வனத்துறை முயற்சிப்பதை தடுப்பது குறித்து கோவையில் முத்தரப்பு கூட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பவானியாற்றின் மீது புதிய பாலம் கட்ட முடிவு
மேட்டுபாளையம், நவ. 28- மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தினுள் செல்ல பவானியாற்றின் குறுக்கே சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இதன் பின்னர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு முன்பிருந்த இரும்பு பாலத்தின் அருகிலேயே பவானியாற்றில் கான்ரீட் பாலம் கட்டப்பட்டது. மேட்டுப்பாளை யத்தை கடந்து உதகை, குன்னூர், கோத்த கிரி செல்ல இந்த ஒரு பாலம் மட்டுமே உள் ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங் களை இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலம் கட்டி 40 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் பழமை காரணமாக இப்பாலம் மெல்ல மெல்ல இதன் பலத்தை இழந்து வருகிறது. பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவர் கள் சேதமடைந்து காணப்படுவதோடு கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது அதிர்வு கள் ஏற்படுகின்றன. மேலும், தற்போதைய போக்குவரத்தை கணக்கில் கொண்டால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க மானியம்இப் பாலம் குறுகிய பாலமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள் ளது. இதற்கான திட்ட விரைவு அறிக்கை தயார் செய்து, டெண்டர் விடப்படும். இதன் பின்னர் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மதிப்பீடு தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப் படும் என தேசிய நெடுஞ்சாலை துறையி னர் தெரிவித்தனர்.
கால்நடை முகாம்
கோவை, நவ.28- கோவை மாவட்டம், கீர ணத்தம் கால்நடை மருந்த கம் கொண்டயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வருத யங்கார்பாளையம் கிராமத் தில் சிறப்பு கால்நடை சுகா தார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திக் திட்ட துணை இயக்குநர், கால் நடை மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆடு, மாடு, நாய், பூனை என மொத்தம் 800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோ தனை செய்யப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க மானியம்
திருப்பூர், நவ.28- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படு கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்க ளின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகம்) மூலமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத் தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரை யத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம் பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கட னாகப் பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண் ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5ஆவது தளம், அறை எண் 501, 503 இல் செயல்படும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971112, 94450-29552 என்ற எண்க ளிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை
திருப்பூர், நவ.28- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து உடுமலை மற் றும் பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலை வர் ஆ.அண்ணாதுரை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதா வது, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு போக்குவ ரத்துக் கழகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரு கின்றன. பேருந்தில் செல்லும் பயணிகளை மரியாதைக் குறை வாக நடத்துவதுடன், சரியான சில்லறை வழங்கப்படுவ தில்லை. சில்லறை இல்லாவிட்டால் பயணிகளை ஏற்ற மறுக் கின்றனர். இது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க இல வச கட்டணமில்லா தொடர்பு எண்களை விளம்பரப்படுத்த வேண்டும். தொழில் துறையில் வளர்ந்து வரும் பல்லடத்தில் போதிய அளவு பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரு பேருந்து கூட இயக்கப்படு வதில்லை. திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந் துகளைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. திருப்பூரில் இருந்து அதிக அளவிலான பயணிகளை ஏற்றி வருவதால் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ஏற முடிவதில்லை. உடுமலை செல்வதற்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆகவே, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி, உடு மலைக்கு அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பாயிலுக்கு பணம் தராமல், மத பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்த இந்து முன்னணி நிர்வாகி
திருப்பூர், நவ.28- ஆப்பாயிலுக்கு பணம் தராத பிரச்ச னையை, மதப் பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் தள்ளுவண்டி கடை நடத்தும் பெண் மீது தாக்குதல் நடத்திய இந்து முன் னணி நிர்வாகி மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. காங்கேயம் திருப்பூர் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மனைவி கீதா (32). இவர்கள் திருப்பூர் சாலை, சிவசக்தி விநாயகர் கோவில் அருகே தள்ளு வண்டி கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்கள் முன்பு காங்கேயம் இந்து முன்னணி நகரச் செயலாளர் நாகராஜ் இவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது சாப்பிடும் முன்பே ஆப்பாயில் உடைந்து விட்டது எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திங்களன்று இரவு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சதீஸ் தலைமையில் நாக ராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து முன் னணி அமைப்பினர் கடைக்கு வந்து, சவுந்தி ரராஜன் மனைவி கீதாவிடம் கோவிலுக்கு அருகே ஆம்லெட் விற்க கூடாது என எச்சரித் துள்ளனர். அதற்கு அவர்கள் நாங்களும் செல் லும் கோவில்தான் எனவும், எங்களுக்கும் கட வுள் நம்பிக்கை இருக்கிறது எனவும் கூறியுள் ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி கும்பல் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே அவரை தாக்கி உள்ளனர். இதை பார்த்து சவுந்திரராஜன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்ததால் இந்து முன்னணியினர் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் காயமடைந்த கீதாவை மீட்டு காங்கே யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில் சதீஸ், நாகராஜ் உள்ளிட் டோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் காங்கேயம் காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறை வாக உள்ள அவர்களை தேடி வருகின்ற னர்.
மாநில அளவிலான கலைத் திருவிழா: அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
அவிநாசி, நவ.28- அவிநாசி பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கலைத் திரு விழா போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள னர். தமிழ் நாடு அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய திருவிழா போட்டி கள், கடந்த மாதம் நடைபெற்றது. இதில் வட்டரா அளவில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அண்மையில் சென்னை வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி யில் பங்கேற்றனர். 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழு நடன பிரிவில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற னர். பரத நாட்டிய (செவ்வியல் குழு நடனம்) போட்டியில், அவிநாசி பெரியாயிபாளையம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் எஸ்.அட்சயகீர்த்தி, ஆர்.தனிஷா, ஆ. மதுயாழினி, எஸ்.அனுஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், பயிற்சியாளர் மதுமிதா ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா வாழ்த்துத் தெரி வித்தார்.
புகையிலைப் பொருட்கள் விற்பனை: தொரவலூரில் ஒருவர் கைது
திருப்பூர், நவ.28- பெருமாநல்லூர் தொரவலூரில் பள்ளி அருகே புகையி லைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக் காரரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர். தொரவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே யுள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட் கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய் யப்பட்டது. இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக் குப் பதிவு செய்து, மளிகைக் கடை உரிமையாளரான குமர வேலை சிறார் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தெரு நாய்களைப் பிடிக்க யாரிடம் பணம் வசூலிப்பது?
திருப்பூர், நவ.28 - வேலம்பாளையம் பகுதியில் தெரு நாய்களின் கடிக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாந கராட்சியைத் தொடர்பு கொண்டால் தனியார் தொண்டு நிறு வனத்தைத் தொடர்பு கொள்ள சொல்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட 13,11,12,14,24,25 வார்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்க்கடியினால் தினந்தோறும் பலர் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், தள்ளு வண்டி வியாபாரிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவி யர், முதியவர்கள் எனப் பலர், கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரி யும் தெருநாய்களால் துரத்திச் செல்லப்பட்டுக் கடி வாங்கி அவதிப்பட்டு வருகின்றனர். தெரு நாய்களைப் பிடிக்க மாநக ராட்சியைத் தொடர்பு கொண்டால், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் எண்ணைத் தருகிறார்கள். அவர்கள் நாய் பிடிக்க உங்கள் பகுதிகளுக்கு வர இவ்வளவு செலவாகும் என்று ஒரு தொகையைக் கேட்கிறார்கள். தெரு நாய்களை பிடிக்கப் பணம் தாருங்கள் என்று யாரிடம் கேட்க முடியும்? யார் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்வது போன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காலாவதியான மாத்திரைகளை சாக்கடையில் வீசினால் அபராதம்
ஈரோடு, நவ.28- காலாவதியான மாத்திரைகளை சாக்கடையில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என ஈரோடு மாநகராட்சி அதி காரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே வஉசி விளை யாட்டு மைதானத்திற்கு செல்லும் ஏபிடி சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள சாக்கடையில் குவியல் குவியலாக மாத்திரைகள் வீசப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து மாத்திரைகளை கைப்பற்றி சோதனை செய்ததில், அது காலாவதியான மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இந்த மாத்திரைகள் மருந்தகம் அல்லது மருத்துவமனைக ளில் இருப்பு வைக்கப்பட்டு, காலாவதியானதும் சாக்கடை களில் வீசி சென்றனரா? தனிநபர் யாரேனும் சாக்கடையில் காலாவதியான மாத்திரையை வீசி சென்றனரா? என அதி காரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் காலாவதியான மருந்து, மாத்திரைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண் டும். சாக்கடையில் வீசி செல்வது கண்டறியப்பட்டால் அபரா தம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலைக்கு உரமிடும் பணியில் விவசாயிகள்
உதகை, நவ.28- நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தோட்டத் தொழிலாக தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. தேயிலைத் தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். ஒவ் வொரு ஆண்டும் ஜூன் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளின்போது தேயிலை மகசூல் அதிகரிக்கும். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள் ளது. மகசூல் அதிகரிப்பு காரணமாக கூட்டுறவு மற்றும் தனி யார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித் துள்ளது. வருவாய் ஈட்டும் நோக்கில், பயிர்களுக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஐபிஎஸ் அதிகாரி மகன் ஆஜர் கோவை,
கோவை, நவ.28- கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வரு கின்றன. அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன் றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்க ளில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண் டும் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் ஷாஜகான் நீதிமன்றத் தில் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் சார்பில் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில், விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் விபத்து குறித்து ஆம்புலன்ஸ்க்கு தக வல் தெரிவித்த சிவகுமார் என்பவரிடம் சிபிசிஐடி அதிகாரி கள் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பிய நிலையில், செவ்வாயன்று அவர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளா கத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்காக வருகை புரிந்தார். கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த போது சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த தாக விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரிடம் சிபிசி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். சிவக்குமார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஞானசம்பந்தனின் மகன் என்ப தும், தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குட்கா பொருட்கள் விற்றால் குற்றவியல் நடவடிக்கை
நாமக்கல், நவ.28- நாமக்கல் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகை யிலை பொருட்களை விற்பனை செய் யும் வணிகர்கள் மீது, குற்றவியல் நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச் சரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லில் காவல்துறை சார் பில், மளிகை மற்றும் பலசரக்கு வணிகர் களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திங்க ளன்று மாலை நடைபெற்றது. காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் முன் னிலை வகித்தார். நாமக்கல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தன ராசு தலைமை வகித்தார். அப்போது தனராசு பேசுகையில், தமிழ்நாடு அர சால் தடை செய்யப்பட்ட குட்கா, புகை யிலை போன்றவற்றை, வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது, வழக் குப்பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்து வது மிக அவசியமாகும். கடைகளில் எக்காரணம் கொண்டும், ரொக்கமாக பணம் வைத்து விட்டு செல்லக்கூடாது. கடை கதவுகளில் சென்டர் லாக் பொருத்த வேண்டும். நாமக்கல் நகரில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, காவல்துறை இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி யுள்ளது. காவல்துறை எடுக்கும் நடவ டிக்கைக்கு, வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகர் முழுவதும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள்ளது. நாமக்கல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள கட் டுப்பாட்டு அறை மூலம், நகரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, என்றார்.