districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது கோவை மாநகர துணை ஆணையர் பேட்டி

கோவை, பிப்.9- கோவை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பீட் சிஸ்டத்தால்” போதைப்பொருள், குற்றச்சம்பங்கள் மாநகரில் வெகுவாக குறைந்துள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் தெரிவித்தார். கோவை மாநகரில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவை ரயில் நிலையம், பேருந்து நிலை யங்களில், துணை ஆணையர் தேவநாதன் தலைமை யில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாநகர காவல் துறையி னர் ஞாயிறன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரயில் நிலைய நடைமேடையில் காத்திருந்த பயணிகளின் உடமைகள், பார்சல்கள், ரயில் பெட்டிகளில் சோதனை யிட்டனர். மேலும், சந்தேகிக்கும் நபர்களிடம் போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். வட மாநிலங்களில்  இருந்து தமிழ்நாடு, கேரளாவிற்கு அடிக்கடி ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதால் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  இது குறித்து பேசிய கோவை மாநகர துணை ஆணை யர் தேவநாதன், கோவை மாநகரில் ஏரியா வாரியாக பிரித்து, போதைப்பொருள் விற்பனை, சமூக விரேத செயல்கள், ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசாருடன் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறோம். மேலும் குற்றச்சம்ப வங்களில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகள், சந்தே கத்திற்கிடமாக உள்ள நபர்களையும் விசாரித்து வருகி றோம். கோவை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பீட் சிஸ்டம்” செயல்பாடுகளால் போதைப்பொருட் கள், சட்ட விரோத செயல்பாடுகள் வெகுவாக குறைந் துள்ளது. அனைத்து பகுதிகளில் போலீசார் காணப்படுவ தாலும், ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் பொதுமக்களி டம் கூடும் பகுதிகளில் சோதனை செய்யப்படுவதால் மக்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது, என்றார்.

கைதி பேசிய வீடியோ வெளியான விவகாரம் சிறைத்துறை அதிகாரிகள் போலீசில் புகார்

கோவை, பிப்.9- கைதி பேசிய வீடியோ வெளியான விவகா ரத்தில், தவறான தகவலை தெரிவித்து கைதி  மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை அதி காரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். தூத்துக்குடி மாவட்டம், தட்டாம்பாறை யைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இந்நிலையில், கைதி விக்ரம் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோவில் கோவை  சிறையில் தன்னுடன் அடைக்கப்பட்டு இருந்தவரை கொன்றுவிட்டனர். அடுத்து நான் தான். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கு எந்த நேரமும் எதுவும் நிகழ லாம், எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு சிறைக் காவலர்கள் 4 பேர் தான் பொறுப்பு. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என பேசிய காட்சிகள் இடம் பெற்று இருந் தது. விக்ரமின் குற்றச்சாட்டை கோவை சிறை அதிகாரிகள் மறுத்ததுடன் வீடியோ கால்  மூலம் பேசும் வசதியை, விக்ரம் தவறாக பயன் படுத்தியுள்ளார் என தெரிவித்தனர்.  இந்நிலையில், இந்த வீடியோ வெளி யான விவகாரம் தொடர்பாக கோவை சிறை  அதிகாரிகள் பந்தய சாலை காவல் நிலையத் தில் புகார் செய்தனர். வீடியோவை வெளி யிட்டவர் மற்றும் வீடியோவில் தவறான தக வலை தெரிவித்த விக்ரம் ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித் துள்ளனர். இது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து திடீர் மாற்றம் பயணிகள் கடும் அவதி

அவிநாசி, பிப்.9- எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி, எந்தவித முன்னறிவுப்புமின்றி போக்குவரத்து மாற்றம் செய்ததால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சப் பள்ளியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் என சில அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி வருகை தந்த, எடப்பாடி பழனிச்சாமிக்கு அவிநாசியில் அதி முகவினர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதிமுக வினர் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் வந்ததால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதனால், அவிநாசி வழியாக மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பேருந்துகளை கருவலூர் வழியாக திருப்பி அனுப்பினர். திடீர் போக்குவரத்து மாற்றத்தால் குறித்த நேரத்திற்கு பேருந்துகள் உரிய இடத்திற்கு செல்ல முடியவில்லை, பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினார்.

சிபிஎம் வாழப்பாடி தாலுகா கன்வீனராக வி.பழனிமுத்து தேர்வு

சேலம், பிப் 9- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட வாழப்பாடி தாலுகா குழு கன்வீனராக வி. பழனிமுத்து தேர்வு செய்யப்பட்டார். சிபிஎம் வாழப்பாடி தாலுகா அமைப்புக் குழு கூட்டம் வலைசியூரில் உள்ள சமுதாயக்  கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, மாவட்ட அமைப்புக்குழு உறுப் பினர் எ.அன்பழகன் தலைமை ஏற்றார். இதில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற் றனர். இதில் 6 பேர் கொண்ட வாழப்பாடி தாலுகா அமைப்புக்குழுவும், இதன் கன்வீன ராக வி.பழனிமுத்து தேர்வு செய்யப்பட்டார்.