கோவை, செப்.1- பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங் கள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. நாட்டில் பெண்களுக்கு ஆன்லைன் மூலம் துன்புறுத்தல், வெறுப்பூட்டும் பேச்சு, புகைப்படங்களை தவறாகப் சித்தரித்தல், மிரட்டல், ஆன்லைனில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங் களை அனுப்புதல் உள்ளிட்ட சைபர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இத் தகைய இணையவழி குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான முழு முயற்சிகளையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சைபர் கிரைம் குற்ற சம்பவங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவை மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. ஃப்ரீடம் ரன் எனும் தலைப்பில் 5 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.