திருப்பூர், ஜூன் 30- இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி மாவீரன் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு. மாவட்ட அளவி லான கிரிக்கெட் போட்டி நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகரக்குழு முடிவு செய்துள் ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகர கமிட்டி யின் சார்பில், ஞாயிறன்று தியாகி பழனிச்சாமி நகர் கிளை அலுவலகத் தில் வடக்கு மாநகரத்திற்குட்பட்ட கிளைகளுக்கான சிறப்புப் பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு வாலிபர் சங்க மாநகரத் தலை வர் எஸ்.கண்ணன் தலைமை வகித் தார். வாலிபர் சங்க கொடியை மாவட்டத் தலைவர் எஸ்.அருள் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். இந்த ஆண் டிற்கான செயல் திட்டத்தை மாநகரச் செயலாளர் எஸ்.விவேக் முன்வைத் தார். மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த ஆண்டு மாந கர கமிட்டியின் சார்பில் மாவட்ட அளவி லான கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து கமிட்டியின் முடிவுகளை விளையாட்டு கழக உறுப்பினர் சந்துரு முன்வைத்தார். கிளை ஊழியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எல்.சரவணன் தமிழன் சிறப் புரையாற்றினார். முடிவில், மாநகர துணைச்செயலாளர் ரமேஷ் நன்றி கூறி னார்.