சென்னை, அக்.22- சட்டரீதியான வேலை விதிமுறைகளை உருவாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தி னர், சென்னையில் திங்களன்று (அக்.21) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நிலையான சட்டவேலை விதிமுறைகளை ஒன்றிய அரசு உருவாக்காமல் உள்ளது. இத னால் மருந்து நிறுவனங்கள் பிரதிநிதிகள் மீது கடும் பணிச்சுமையை திணிக்கின்றன. நிறு வனத்தின் வியாபார இலக்கை அடை யாத பிரதிநிதிகளை, பணிநீக்கம், வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம், ஊதிய வெட்டு என பழி வாங்குகிறது. சட்டத் திற்கு புறம்பாக தனிமனித உரிமையில் தலையிட்டு கடுமையான நடவடிக்கை களை எடுக்கின்றது. எனவே, மருந்து விற்பனை பிரதிநிதி களுக்கு நிலையான, சட்டப்படியான வேலை விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதி களுக்கான விற்பனை அபிவிருத்தி பணி யாளர் சட்டம் - 1976ஐ முழுமையாக அமல் படுத்த வேண்டும்; மின்னணு சாதனங்கள் மூலம் தனி மனித உரிமையைப் பறிக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் ஊடுரு வல் செய்வதை தடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை கைவிட வேண்டும். மருந்துத் துறை சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களை புனரமைத்து மீண்டும் செயல்பட வைக்க வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். மருந்து நிறுவனங்கள் அபரிமிதமான லாபம் பெறுவதற்குத் துணை போகும் ஒன்றிய அரசின் மருந்து விலை நிர்ணயக் கொள்கை யை மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி. விவேகானந்தன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அகில இந்திய சம்மேளனத் தலைவர் எஸ்.ரமேஷ் சுந்தர் நிறைவுரையாற்றினார்.