districts

img

தருமபுரியில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கிடுக

தருமபுரி, நவ.30- தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய  ஊராட்சி ஒன்றியங்களை உரு வாக்க வேண்டும், என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங் கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின்,  தருமபுரி மாவட்ட 9 ஆவது மாநாடு,  தருமபுரி வின்சென்ட் திருமண மண் டபத்தில் சனியன்று நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் முகமது இலி யாஸ் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் கோ.கோபிநாத்  அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்களின்  ஒருங்கிணைப்பாளர் ச.இளங்கும ரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இரா.ஆறுமுகம் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செய லாளர் வே.தர்மன், பொருளாளர்  கே.வினோத்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலை வர் அப்பாவு ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். இம்மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில், அரசின் திட்டங் கள் விரைவாக சென்றடைய இண் டூர், தீர்த்தமலை, மாரண்டஅள்ளி, பெரியாம்பட்டி ஆகிய 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உரு வாக்க வேண்டும். கிராமப்புற ஊராட்சிகளை நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுடன் இணைப் பதை கைவிட வேண்டும். ஒகேனக் கல் சுற்றுலாத் தலத்தை கணக்கில்  கொண்டு, தனி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உரு வாக்க வேண்டும். மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளவாறு, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை யில் வட்டார திட்ட அலுவலரை தனி யாக நியமித்து, ஊழியர் கட்ட மைப்பு ஏற்படுத்த வேண்டும். விடு முறை தினத்தில் இணைய வழி ஆய்வுக்கூட்டம், நேரடி ஆய்வுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  தருமபுரி மாவட்டத் தலைவராக மு. முகமது இலியாஸ், செயலாளராக வெ.தர்மன், பொருளாளராக கே. வினோத் குமார், மாநில செயற்குழு உறுப்பினராக பி பிரின்ஸ், வட்டார  வளர்ச்சி அலுவலர் ஒருங்கிணைப் பாளராக ச.இளங்குமரன் உள் ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் ப.பாரி நிறைவுரை யாற்றினார். முடிவில், மாவட்ட நிர் வாகி பிரின்ஸ் நன்றி கூறினார். இதில் மாநில செயற்குழு உறுப்பி னர் பா.சங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் பெ.கிருஷ்ணமூர்த்தி, கே.வேலுமணி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.