நாமக்கல், மே 3- குமாரபாளையம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் நடை பாதை, குண்டும் குழியுமாக இருப்பதால், பொதுமக்க ளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட் டத்தையடுத்து சீர் செய்யப் பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, 11 ஆவது வார்டு பகுதியில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலை யில், இப்பகுதியை ஒட்டி செல்லும் நடை பாதையில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்து அந்த சாலையின் ஒரு பகுதி பள்ளமானது. இத னால் அவ்வழியே செல்ல முடியாத சூழல் ஏற் பட்டது. இரவு நேரங்களில் அவ்வழியே வரும் பெண்கள், முதியோர் குழந்தைகள் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், இந்த நடை பாதை சாலையை முழுமையாக சரி செய்து தர வேண்டும் என குமாரபாளையம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட் டம் நடைபெறும் என பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, போராட்ட அறிவிப்பு செய்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக் கள் கூடும் இடங்களில் பேனர் வைத்தனர். இது குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத் திற்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நக ராட்சி ஊழியர்கள் உடனடியாக சேதமடைந்த நடைபாதை சாலையை முழுமையாக சீர மைப்பு செய்தனர். போராட்ட அறிவிப்பால், சாலை சீர் செய்யப்பட்டதை அறிந்த மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.