திருப்பூர், பிப்.14 - தெரு நாய்களால் கால்நடை கள் கொல்லப்பட்டு விவசாயிகள் பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் நிலையில் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்ச னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வெள்ளியன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, காங்கேயம், வெள்ளகோவில் மற் றும் தாராபுரம் ஒன்றியங்களிலும், இதர கிராமப்புறப் பகுதிகளிலும் விவசாயிகளின் வளர்ப்புக் கால் நடைகளான ஆடுகள், எருமை மற் றும் மாடுகளின் கன்றுக்குட்டிகள், கோழிகளை தெரு நாய்கள் கடித் துக் கொன்று வருகின்றன. கடும் நெருக்கடியில் விவசாயம் பாதிக் கப்பட்டு விளைப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கா மல் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில், கால்நடை வளர்ப்பு தான் ஏழை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரமாக கை கொடுத்து வருகிறது. இந்நிலை யில் தெரு நாய்களால் கால்நடை கள் கொல்லப்பட்டு விவசாயிக ளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தெரு நாய்கள் கடித்து கால் நடைகள் கொல்லப்பட்டு பொருளா தார இழப்பு ஏற்படுத்தும் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தன்னெழுச்சியான போராட்டங்களையும் நடத்திய நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வா கம் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வும், இழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த னர். அதன் பிறகும் இரண்டு மாதங் கள் கடந்துவிட்ட நிலையில் தெரு நாய்களால் விவசாயிகளின் வளர்ப் புக் கால்நடைகள் பறிபோகும் சம் பவங்கள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. எனினும் அரசு நிர்வாகம் விவசாயிகளுக்கு எந்த நிவார ணமோ, இழப்பீடோ, தெருநாய்க ளைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதி யான நடவடிக்கையோ எடுக்கா தது வேதனை அளிப்பதாக உள் ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட் டம், காங்கேயம் - சென்னிமலை சாலையில் பாரவலசு என்ற இடத் தில் திருப்பூர், ஈரோடு மாவட்ட விவ சாயிகள் ஒன்றிணைந்து நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ள னர். இழப்பீடு பெறும் வரை போராட் டம் தொடரும் என்று அறிவித்து அங் கேயே இரண்டாவது நாளாக வெள் ளிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று, உரிய இழப்பீடு முழுமை யாக வழங்கவும், பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உறுதி யான நடவடிக்கை எடுக்கவும் வேண் டும் என அதில் தெரிவித்துள்ளார்.