நாமக்கல், பிப்.7- மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சி லர் தலைமையில், தொடர் போராட்டத்தின் காரணமாக இதய பாதிப்பு ஏற்பட்ட சிறு மிக்கு மருத்துவ காப்பீடு அட்டையை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த கார்த் திக் - சுமதி தம்பதியினருக்கு கனிஷ்கா(11) என்ற மகள் உள்ளார். எலச்சிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கனிஷ்கா 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நி லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளியில் திடீரென கனிஷ்கா மயங்கிய தால் ,அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பெற் றோரை வரவழைத்து கனிஷ்காவை மருத்து வமனையில் பரிசோதனை மேற்கொண்ட தில், சிறுமி கனிஷ்கா இருதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறி யுள்ளனர். இதனையடுத்து, மருத்துவ காப்பீடு திட் டத்தின் மூலம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சி செய்துள் ளனர். ஆனால் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாததால், மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு குடும்ப அட்டை அவசியம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், திருச் செங்கோடு வட்டாச்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை கேட்டு கனிஷ்கா பெற் றோர்கள் விண்ணப்பித்துள்ளனர், கடந்த நான்கு மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டை கிடைக்காததால் மனமுடைந்த தாய் சுமதி, சிறுமி கனிஷ்கா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகிய மூன்று பேரும், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்பு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடும்ப அட்டை பெற உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவதாக கூறிய தால் போராட்டத்தை கைவிட்டனர். இதனை யடுத்து, புதனன்று சிறுமியின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டும், சிறுமி சிகிச்சை மேற்கொள் வதற்காக மருத்துவ காப்பீடு அட்டை அதிகா ரிகளால் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வோடு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் போராட்டம் நடத்தி, குடும்ப அட்டையும், காப்பீட்டு அட் டையும் பெற்று கொடுத்த சம்பவம் அப்ப குதியினரிடையே நெகிழ்ச்சியையும், மார்க் சிஸ்ட் கட்சியின் மீது மரியாதையும் ஏற்படுத் தியுள்ளது.