கருஞ்சிறுத்தை நடமாட்டம்
கருஞ்சிறுத்தை நடமாட்டம் கோவை, நவ.29- சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நட மாடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள் ளது. கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் அதி கம் உள்ளன. குறிப்பாக காப்புக்காடு பகுதிகளான ஆனைக் கட்டி, மாங்கரை அதனை ஒட்டியுள்ள தடாகம், சோமைய னூர், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுத்தை இருந்த செல் போன் வீடியோ காட்சிகள் வைரலானது. இந்நிலையில் வெள்ளியன்று சின்ன தடாகம்- வீரபாண்டிப்புதூர் செல்லும் வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் கருஞ் சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, வீரபாண்டிபுதூர் செல் வோர் கவனமாக செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் கருஞ்சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் தேங்கும் தண்ணீர்
சாலையில் தேங்கும் தண்ணீர் ஈரோடு, நவ.29- ஈரோடு பிரப் சாலையில் தண்ணீர் தேங்கும் பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். ஈரோடு மாகரில் தந்தை பெரியார் அரசு தலைமை பல் நோக்கு மருத்துவமனை மற்றும் பன்னீர்செல்வம் பூங்காவை இணைப்பது பிரப் சாலை. இச்சாலையில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கி விடும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி வியாபாரி கள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து தெரிவித்தனர். அத னைத்தொடர்ந்து அமைச்சர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு, வியாழனன்று மாநகர ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். இந்த குறையை நிவர்த்தி செய்து தருமாறு உத்தரவிட்டார்.
தொப்பூர் கனவாயில் விபத்து: ஒருவர் பலி
தருமபுரி, நவ.29- தொப்பூர் கனவாயில் தறிகட்டு ஓடிய லாரி அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒரு வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஐதராபாத்திலிருந்து பஞ்சுபேல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி புறப்பட் டது. லாரியை ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழி யாக வெள்ளியன்று வந்தது. அப்போது தொப்பூர் கனவாய் முதல் வளைவில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன் னாள் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாக னங்கள் மீது மோதிவிட்டு, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக் கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் தார். மேலும், இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த நான்கு பேர் மற்றும் லாரி ஓட்டுநர் என 5 பேர் படுகாயமடைந் தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த சுங்கச்சாவடி ரோந்து படையி னர், காவல் துறையினருடன் இணைந்து, விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி எம்எல்ஏக்கள் மனு
சேலம், நவ.29- மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும், என வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் கள் ஆத்தூர் கோட்டாட்சியரிடம் மனு அளித் தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமை யில் பொதுமக்கள், வியாழனன்று ஆத்தூர் கோட்டாட்சியர் தா.பிரியதர்ஷினியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் ஏற்காடு தொகு திக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசநத்தம் கிராமத் தில் மயானத்திற்குட்பட்ட பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு அதிகாரி கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆக்கிர மிப்புகளை அகற்றி, மயான வசதியை உறுதி படுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டி ருந்தது. அம்மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி யளித்தார்.
பயிரிட்ட ஒரே மாதத்தில் அழுகும் நெல் பயிர்கள்: ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருப்பூர், நவ.29- மடத்துக்குளம் முதல் தாராபுரம் வரை 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் ஒரே மாதத்தில் அழுகி விடுகிறது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதா வது, மடத்துக்குளம் தாராபுரம் பகுதி யில் 3000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் ஒரே மாதத்தில் அழுகி விடுகிறது. இது நோய் தக்குதலா அல்லது பூச்சு மருந்து அடித்ததன் பாதிப்பா என தெரியவில்லை. இத னால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் மைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக் குளம் பகுதியில் உள்ள 3 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும் பூட் டியே உள்ளன. இதனால் விவசாயி கள் வெளியில் வைத்து விளை பொருட்களை விற்பனை செய்கின்ற னர். விவசாயிகள் ஒழுங்குமுறை விற் பனை கூடத்திற்குள் விற்பனை செய் யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி, மிளகாய் ஏக்க ருக்கு 10 டன் விளைச்சல் கிடைக்கும் என பன்னாட்டு தனியார் நிறுவனங் கள் விதைகளை விற்பனை செய்கி றார்கள். ஆனால் ஏக்கருக்கு 3 டன் முதல் 4 டன் மட்டுமே கிடைக்கிறது. இதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல திருமூர்த்தி மலை முதல் குறுமலை வரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் வாகனங்களை பயன்ப டுத்த பர்வேஸ் போர்டலில் விண்ணப் பிக்க வனத்துறையினர் கட்டாயப் படுத்துகின்றனர் என்றார். கரும்பு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எ.பாலதண்டபாணி, கூறுகையில், அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத் தும், இன்னும் போதுமான நிதி ஒதுக் கப்படவில்லை. எத்தனை ஏக்கர் பயிர் செய்தாலும் ஒப்பந்தம் போடவில்லை என்றால், ரூ.1.60 லட்சம் வரை தான் கடன் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்தால் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும். எனவே முறையாக ஒப்பந் தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் பயிரப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் காட்டு பன்றிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை கூட்டங்களில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. காட்டு பன்றிகளின் தாக் குதல்களுக்கு உள்ளாகும் விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுதில்லை. விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குரல் குட்டை பகுதியில் பெரிய அளவில் நீர் வழி பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவம னைகளில் மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் காலை மற்றும் மாலையிலும் மருத்து வர்கள் இருக்க வேண்டும். விவசாயி களுக்கு தமிழக அரசின் இலவச மின் திட்டம் குறித்து முறையாக தகவல் அளிக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச்செயலாளர் செல் வம் பேசுகையில், டாப்சிலிப் மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி யில் உள்ள 24 வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கப்ப டிருந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன துறை கண் காணிப்பு டவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் மலை கிராமங்களில் சாலை வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக் களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேசினார். இதை தொடர்ந்து விவசாயிகள் சிலர் பேசுகையில், தாராபுரம் பகுதி யில் இரு இடங்களில் டிச.3 ஆம் தேதி கல்குவாரி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவ தாக சுற்றறிக்கை வந்துள்ளது. ஒரு கருத்து கேட்பு கூட்டத்தை வேறு தேதி யில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தாராபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்து வமனை வளாகத்தில் செல்ல முடி யாத அளவிற்கு நீர் தேங்கி நிற்கி றது. அதை சரி செய்ய வேண்டும். அதேபோல் கூட்டுறவு சொசைட்டி யில் யூரியா கிடைப்பதில்லை. உற் பத்தி செலவை கணக்கில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.
மின்மயானம் தனியாருக்கா? சிபிஎம் எதிர்ப்பு
மின்மயானம் தனியாருக்கா? சிபிஎம் எதிர்ப்பு நாமக்கல், நவ.29- மின்மயானத்தை தனியாருக்கு டென்டர் விடும் முடிவை திரும்பப்பெற வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் பிரதேசக்குழு சார்பில் எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத் தில் வெள்ளியன்று அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதுகாத்திட, கிராமப்புறங்களில் மின் மயா னங்களை அமைப்பது என்பது தமிழக அரசின் நோக்கமா கும். எனவே எருமப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின் மயானத்தை, ஏழை எளிய மக்களும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு பயன்படும் வகையில் செயல் படுத்த வேண்டும். ஆனால், மின் மயானத்தை தனியாருக்கு டெண்டர் விடும் நோக்கத்தை அமல்படுத்தக்கூடாது. அதே வேளையில் தனியாருக்கு டெண்டர் விடுவது மக்கள் நல னுக்கு எதிராக முடியும். எனவே, மின் மயானத்தை அரசே நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் கட்சியின் எருமப்பட்டி நகரச் செயலாளர் எஸ்.கே. சிவச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் ஆனந்தன், சிவசங்க ரன், ஸ்ரீதர், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் கொலை
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் கொலை திருப்பூர், நவ.29- பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த, தாய் தந்தை, மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வ சிகா மணி (78). இவரது மனைவி அலமேலு (75). இத்தம்பதி யருக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இருவரும் திரு மணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலை யிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று நடைபெறும் நிச்சயதார்த்த விழாவுக்காக, மகன் செந்தில் குமார் வியாழனன்று சேமலை கவுண்டம்பாளையத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், நிச்சயதார்த்த விழாவுக்கு செல் வதற்காக தெய்வசிகாமணி அந்த ஊரைச் சேர்ந்த சவரத் தொழிலாளி சக்கரகட்டி என்பவரை அதிகாலை வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார். வெள்ளியன்று அதிகாலை சவரத் தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அவிநாசிபாளையம் காவலர்களுக்கு தகவல் அளித்தார். இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டில் இருந்த 8 பவுன் நகை காணவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையர் லட்சுமி சம்பட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது
உதகை, நவ.29- கட்டிட அனுமதிக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெகதளா பேரூராட்சி செயல் அலு வலரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை யினர் கைது செய்தனர். நீலகிரி மலை மாவட்டமாக உள்ளதாலும், பாறைகள் அதிகமாக இருப்பதாலும், வனப் பகுதியை ஒட்டி இருப்பதாலும், மாவட்டத் தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மலைச்சரிவுகளில் அனு மதியின்றி பொக்லைன் எந்திரங்களை பயன் படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள் ளது. இதனால் கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர் வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ் நிலை உள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகத் திலும் அனுமதி வாங்கினாலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடமும் அனுமதி வாங்க வேண்டும். இதை பயன்படுத்தி உள் ளாட்சி அமைப்புகளில் அனுமதி கொடுக்க அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இந் நிலையில், குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ராஜ்குமார் என் பவர், கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு, உள்ளாட்சி அமைப் பான ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து கட்டிட அனுமதி வழங் குவதற்கு சுபாஷ் ராஜ்குமாரிடம், ஜெக தளா பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாத சுபாஷ் ராஜ்குமார் இதுகுறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொ டர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வா ளர் பரிமளா தேவி ஆகியோர் தலைமையி லான போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டு களை சுபாஷ் ராஜ்குமார், ஜெகதளா பேரூ ராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜனி டம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரவ ணன் ராஜனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் நீலகிரி மாவட் டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை கோபி, நவ.29- கொடிவேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி தடப் பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடிவேரி அணைக்கட்டின் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்தின் மூலம் 24ஆயிரத்து 504 ஏக் கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுதோறும் இருபோக நெல் சாகுபடி செய்து வரும் நிலையில், இந்தாண்டு தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல்போகத்திற்காக கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நெல் சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவுற்ற நிலையில், அணைக்கு நீர் வரத்து கனிசமாக உள்ளது. பருவமழை காலம் தொடர்வதால் இதனை அடிப்படையாக கொண்டு கொடிவேரி அணை பாச னத்திற்குட்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கா லில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தல்
தருமபுரி, நவ.29- மரவள்ளிக்கிழங்கு விவசாயிக ளுக்கான முத்தரப்பு கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும், என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட் சியர் கி.சாந்தி தலைமையில் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலந்து கொண்ட விவசாயி கள் பேசுகையில், தருமபுரியில் சிப் காட் தொழிற்பேட்டை அமைக்க கையகப்படுத்தப்பட்ட மேய்ச்சல் நிலங்களுக்கு உரிய மாற்று இடத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மயில்கள் மற்றும் காட் டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம டையும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வாணியாறு அணை நிரம்பியுள்ளதால், வெளி யேறும் உபரிநீரை, ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் மாடுகள் மேய்ப் பதற்கு உரிய அனுமதி வழங்க வேண் டும். மாவட்டத்தில் பல்வேறு ஏரிக ளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண் டும். இ – சேவை மையங்கள் முறை யாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மரவள்ளி விவ சாயிகளுக்கான முத்தரப்பு கூட் டத்தை விரைவாக நடத்த வேண் டும். காடுகளில் நீண்ட காலமாக குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது, என்றனர். இதைத்தொடர்ந்து, வேளாண் மைத்துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று, அவர்க ளின் உற்பத்தியையும், வருமானத் தையும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நிலை அலுவலர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, சுப்பரமணிய சிவா கூட்டு றவு சர்க்கரை ஆலை வருவாய் அலு வலர் பிரியா, மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை வருவாய் அலுவ லர் ரவி, வேளாண்மை இணை இயக்குநர் மரிய ரவி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.