சேலம், ஜூன் 7- சேலம் அரசு மருத்துவமனை யில் குழந்தை பிரசவித்த இளம் பெண் தவறான சிகிச்சையால் மருத் துவமனையில் உயிரிழந்ததாக அப் பெண்ணின் உறவினர்கள் குற்றஞ் சாட்டினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தாசநாயக் கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி (34). கடந்த மே 24 ஆம் தேதியன்று பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். அடுத்த நாள் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு திங்களன்று இரவு திடீரென கலைவாணி உயிரிழந் தார். அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களின் அலட்சி யத்தாலும், மயக்க மருந்து அதிகள வில் கொடுத்ததால் கலைவாணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ் சாட்டினர்.
இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பெண் ணின் உறவினர்கள் 100க்கும் மேற் பட்டோர் சாலையில் அமர்ந்து தர் ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, தவ றான சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். உயிரிழந்த பெண்ணின் குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பிரேத பரிசோத னையின்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தேக மர ணம் என்ற அடிப்படையில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல் லூரி காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை நடப்பதை ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. நிவா ரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை என்பது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட் டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், பொன்.ரமணி, ஏ.முருகேசன், பன மரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.