districts

img

மின் கட்டண உயர்விற்கு எதிராக சிபிஎம் முழக்கம்

கோவை, ஜூலை 26- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மின்வாரி யத்தை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு அடிபணியக்கூடாது என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, புலியகுளம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அஜய்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.ஜாகீர், என். சுதா மற்றும் த.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வடவள்ளியில் முருகேசன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ஆறுச்சாமி, ஒன்றியச் செய லாளர் வி.மணி, மூத்த தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ராமசுப்பு ஆகி யோர் கலந்து கொண்டனர். எஸ்.எஸ். குளம் ஒன்றியம் மேற்கு கமிட்டிக்குட் பட்ட உடையாம்பாளையம் மாரி யம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபி எம் கோவை மாமன்றக்குழு தலை வர் வி.ராமமூர்த்தி தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ராதிகா, ஒன்றியச் செய லாளர் சண்முகசுந்தரம், 13 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம்  பெத்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலை யம் முன்பு, மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு கவுன்சிலர் ராம சாமி தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, பெத்தநாயக்கன்பா ளையம் தாலுகாச் செயலாளர் காளிதாஸ், தாலுகாக்குழு உறுப்பி னர் டி.பெருமா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். சேலம் தாலுகா குழுவின் சார்பில், என கன்னங்கு றிச்சி மின்சார வாரியம் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனி சாமி, தாலுகாக்குழு உறுப்பி னர்கள் அ.சுந்தரம், எம்.செல்வி, எம்.சீனிவாசன், எம்.சின்னசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.