districts

திருப்பூரில் செவிலியர் கல்லூரி, நோயாளர் நலச்சங்கம் சுகாதாரத்துறை செயலாளருக்கு சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், மே 26 - திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக செவிலியர் கல்லூரி, நோயாளர் நல சங்கம், மருத்துவ மனை வளர்ச்சிக்குழு அமைக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் தமிழக சுகா தாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனையாக இருந்தபோதே தின மும் 3000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுசென்றனர். குறைவான படுக்கை வசதிகள் உள்ள சூழலிலும், உள்  நோயாளிகளாக 600க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையாக  தரம் உயர்த்தப்பட்ட பின்பு கொரோனா நோய் தொற்று காரணமாக கட்டுமானப் பணிகள் முடங்கி இருந்தது. தற் போது கட்டுமானப் பணிகள் மீண்டும் நடை பெற்று வருகிறது.  மருத்துவக் கல்லூரியில் கல்வியாண்டு  துவங்கி மருத்துவ வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை அதிக ரிக்கப்பட்டுள்ளது. உயர் மருத்துவத்திற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையை நாடி செல்லும் நிலையில் இருந்து படிப்படியாக திருப்பூர் அரசு மருத் துவமனையில் உயர்சிகிச்சை அளிக்க மருத் துவக் கல்லூரி நிர்வாகம் முயன்று வருவ தும், அதற்கு மாவட்ட நிர்வாகமும் ஒத்த ழைப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட அதி நவீன சிக்கலான மருத்துவ சிகிச்சை என்றால் கோவைக்கு செல்லும் நிலையே உள்ளது. இருந்த போதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலை யில் கடந்த கால நடைமுறை செயல்பாடு களில் இருந்து நோயாளிகளை கவனித்துக் கொள்வது, மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது, 24 மணி நேர புறநோயாளிகள் பிரிவை செயல் படுத்துவது போன்றவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்  ஆகும். 

பாதுகாப்புடன் கட்டுமான பணி

மேலும் தற்போது மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும். இங்கு ஏற்படும் தூசிகள், புழுதி காரணமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி கள் மட்டுமல்லாது, பார்வையாளர்கள், மருத் துவமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பாதுகாப்பு அம்சங்க ளோடு கட்டுமானப் பணிகள் நடைபெற வேண்டும். மருத்துவமனையில் உருவா கும் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது உடனுக்குடன் மாநகராட்சி நிர்வாக உதவி யோடு அப்புறப்படுத்த திட்டமிட வேண்டும். குடிநீர், பொதுக் கழிப்பறை, பார்வையா ளர்கள் அமருமிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டு பொதுமக்கள் பயன்படும் வகை யில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.  கடந்த காலத்தில் திட்டமிடல் இல்லாமல் ஆங்காங்கே கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்து கட்டியதன் விளைவாக இட நெருக்கடியை தற்போது மருத்துவமனை சந்தித்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மட்டுமே 165 ச. கிலோமீட்டர் சுற்றளவும் சுமார் 15 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட பகுதியாக மாறியுள்ளது. நகர்புற சுகாதார மையங்கள் வார்டுகளில் அமைக்கப்பட்டாலும், அதி நவீன உயர் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் பெரும் பகுதி ஏழை, எளிய சாமானிய மக்கள் உள்ள னர்.  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட சூழலில் ஏராளமான செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். ஆகவே ஏற்கனவே பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த அரசு மருத் துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் கல்லூரியை துவக்குவது, திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டை மேலும் பலப்படுத்த உத வும். திருப்பூர் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள இடத்தில் இந்த செவிலி யர் கல்லூரி அமைப்பதுடன், நோயாளிகள் நலச் சங்கம் புதுப்பிப்பது, அரசு மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக் குழு அமைப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.