districts

img

இலவச வீட்டு மனை வழங்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், ஆக. 22- ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்  கோரி அவிநாசி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை  எளிய மக்களுக்கு க.ச. 544/1 நிலத்தில் இலவச வீட்டு  மனை பட்டா வழங்கக் கோரி அவிநாசி வட்டாட்சி யரிடம் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்  கொண்ட வட்டாட்சியர், அனைத்து மக்களுக்கும் இலவச  வீட்டு மனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச்  செயலாளர் ஆர்.காளியப்பன், அவிநாசி ஒன்றியச் செய லாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.சிகா மணி, ஆர். பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பி னர் பி.கே. கருப்புசாமி, கிளைச் செயலாளர்கள் கே. சுப்பிரமணி, சந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக் கள் கலந்து கொண்டனர்.