உடுமலை, டிச.28- குரல்குட்டை ஊராட்சிக்குச் சொந்தமான பொது மேடை உள்ள பகுதியை பராமரிப்பு செய்து தர மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை ஊராட்சி ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சியில் பொதுமக்கள் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஊராட்சிக்கு சொந்தமான பொது மேடை உள்ளது. அடுத்த மாதம் பொங்கல் விழாவின் போது பொது மேடையில் நிகழ்ச்சி கள் நடைபெறுவதால், அப்பகுதியை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக பராமரித்துத் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் குட்டை கட்சி கிளைகள் சார்பாக ஊராட்சி செயலாளரிடம் புத னன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் மற்றும் கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற னர்.