உடுமலை, மார்ச் 14- மரணத்தை வென்ற மாமேதை மார்க்ஸ் என்ற தலைப்பில் உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஞ்ஞான கம்யூனிஸ தத்துவத்தை உல குக்கு வழங்கிய கார்ல் மார்க்ஸின் 140ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல்குட்டை கிளையின் மூத்த தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து மார்க்ஸின் இன்றைய பொருத்தப் பாடு குறித்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் இடுவாய் ஊராட்சிமன்ற தலைவர் கே.கணேசன் இடுவாய் தியாகி ரத்தினசாமியின் தியாகம் குறித்துப் பேசினார்.மேலும் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், முரு கவேல் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலை ஞர் சங்கத்தின் உடுமலை மக்கள் பாடகர் துரைய ரசன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தமிழ்தென்றல், குமரகுரு மற்றும் கிளை செயலா ளர்கள், கிளை உறுப்பினர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.