districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு: பழுதடைந்த சாலை சீரமைப்பு

கோவை, நவ.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப் பின் எதிரொலியாக, பழுதடைந்த சாலையை கோவை மாநக ராட்சி நிர்வாகம் சீரமைத்துள்ளது. கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சாலை, சூர்யா நகர் பகு திகளில் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியாகவும் இருக்கும் சாலையினை சீரமைக்க வேண்டும் என வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும்  போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சனியன்று மாலை  போராட்டத்திற்கு கட்சியினர் திரண்ட நிலையில், மாநக ராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், விரைந்து சாலையை சீரமைத்து தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது. முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தேவேந்திரன், சிங்கா நல்லூர் நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி, நகரக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், பரமசிவம், கிளைச் செயலா ளர்கள் பாண்டியன், மணிகண்டன், தியாகு, ராஜ்குமார் மற்றும்  திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.