உடுமலை, ஜூலை 24- மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்து; மோடி அரசே! நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற் போக்கு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மணிப்பூர் குக்கி, ஜோ பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்களை பாலி யல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய ஒன் றிய, மாநில அரசை கண்டித்து, குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசி கலா தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களை விளக்கி கட்சியின் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ஓம்பிரகாஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜெயப்பிரகாசம் ஆகியோர் பேசி னர். கமிட்டி உறுப்பினர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். இதேபோன்று, உடுமலைப்பேட்டை ஜல் லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் ஏ. பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், கமிட்டி உறுப்பினர்கள் கே.முருகவேல், எம்.டி.அருண் பிரகாஷ், தமிழ்த் தென்றல், மலை சங்க கமிட்டி திருமூர்த்திமலை மணி, வாலிபர் சங்க கமிட்டி உறுப்பினர் மாசானி ஆகியோர் பேசி னர். கமிட்டி உறுப்பினர் ஆர்.குமரகுரு நன்றி கூறினார்.
கிளைச் செயலாளர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கனை எழுப் பினர். இதேபோன்று முத்துசெட்டிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சண்முகம், பாலசுப்பிர மணியம், முருகன், மோகனசுந்தரம், பழனிச் சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரம ணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு ஒன்றியக்குழு சார்பில், வீரபாண்டி நால் ரோட்டில் வாலிபர் சங்க தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் தீபாஸ்ரீ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள், மாவட்ட செய லாளர் செ.மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் க.சிந்தன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில், தெற்கு ஒன் றிய நிர்வாகிகள் பிரபு, கோபால், நடராஜ், சுர் ஜித், சம்பத், ராஜகுரு மற்றும் பகுதி கிளை செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறு முகம் நன்றி கூறினார்.