அவிநாசி, மார்ச்.12 ஸ்டேட் பேங்க் தேர்தல் பத்திர விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பிரமுகர்களி டம் நிதி பெற்றது சட்ட விரோதமானது, தகவல் அறியும் சட்டத் தின் உரிமையை மீறியுள்ளது. எனவே ஸ்டேட் வங்கி மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் எந்தெந்த கட்சிகள் நன்கொடை பெறப்பட்டது என்ற விபரங்களை ஸ்டேட்பேங்க் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. இதற்கு ஸ்டேட் பேங்க் கால அவகாசம் கேட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசி ஸ்டேட் பேங்க் முன்பு சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கனகராஜ் தலைமையில் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாதர் சங்க நிர்வாகிகள் சித்ரா, செல்வி, சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.