பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் இண்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்டச் செயலாளர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், ஆர்.சின்னசாமி, ஒன்றியச் செயலாளர் சக்திவேல், சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.