districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பழனி, ஆக.21- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமை  அலுவலகம் தில்லி சுர்ஜித் பவனில் மார்க்சிய அறி ஞர்கள், அறிவுஜீவிகளால் நடத்தப்பட்டிருந்த கருத்த ரங்கைச் சீர்குலைக்க முயன்ற காவல்துறையைக் கண்டித்து பழனி, நிலக் கோட்டை, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர்க்குழு உறுப்பினர் மனோ கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, பகத் சிங், பிச்சை, முத்து, ராஜேந் திரன், ஷெரீப், கோபி, மாரி கண்ணு, மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். நிலக்கோட்டையில் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.செளந்தர்ராஜன், அஜாய், கே.ஆர். பாலாஜி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அய்யலூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் குணசேகரன், ஒன்றி யச்செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.  திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மூத்த தலைவர் வி. குமரவேல், மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர் செயலாளர் ஏ.அரபு முகமது, மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.