பள்ளிபாளையம், பிப்.25- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் வாய்க்கொழுப்பை கண்டித்து பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டு மக்களின் நலனுக் காக எந்த வேலையையும் செய் யாத ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், மக்க ளுக்கும், எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். தனக்குண்டான பணிகளை செய்யாமல் தான் தோன்றித்தனமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், அண்மையில், காரல்மார்க்ஸ் குறித்தும், மார்க்சிய தத்துவம் குறித்தும் அடிப்படை அறிவும் இல்லாமல், ஆளுநர் ஆன்லைன் ரம்மி ரவி உளறியது, பொதுவுடமை இயக்கத்தை மட்டு மல்லாமல், உழைக்கும் வர்க்கத் தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களை முன் னெடுத்துள்ளது. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவது என அறிவித்து, இப் போராட்டங்கள் ஆவேசத்துடன் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், உளரல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பள்ளி பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் நாமக்கல் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், சுரேஷ், கட்சி மாவட்ட குழு உறுப்பினர் இ.கோவிந்தராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன், பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய உறுப்பினர் முத்துக் குமார், கே.குமார் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். தருமபுரி மார்க்சியத்தை அவதூரக பேசிய தமிழ்நாடு அளுநர் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய லாளர் ஏ.குமார் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவிந்தரன் கண்டன உரையாற்றி னார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து ஆர். சிசுபாலன் எம்.முத்து, சோ. அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.ஜோதிபாசு, ஆர்.சின்னசாமி, ஆர்.மல்லிகா, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.