பென்னாகரம், அக்.18- பென்னாகரம் வட்டம், செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட ஜங்கமயனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், ஜங்கம்மையனூர் கிராமத்தில் ஆலமரத்தடியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை உடனடியாக அகற்றிட வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் முறையாக கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். ஜங்கமையனூர் கிரா மத்தில் இருந்து செங்கனூர் வரை தார்ச்சாலையை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பகுதி செயலாளர் ஜே.பி. சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.மாதன், பகுதி குழுச் செயலாளர் வி.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அன்பு, ஆ.ஜீவானந்தம், பென்னா கரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.