உடுமலை, டிச.29- கொமரலிங்கம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பேரூராட்சி அலுவலகத் தில் மனு அளிக்கப்பட்டது. மடத்துக்குளம் தாலுகா, கொம ரலிங்கம் பேரூராட்சியில் 15 வார்டுக ளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். உடுமலை மற்றும் கேரளாவில் இருந்து பழனி செல்ல கொமரலிங்கம் பகுதி மைய மாக உள்ளதால் போக்குவரத்து நெரி சல் இல்லாத வகையில் சாலை களைச் சரி செய்ய வேண்டும். இங்கு தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவ மனை உள்ளது. இதில் போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர் கள் இல்லாத காரணத்தால் பொது மக்கள் போதிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் உடுமலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட படுக்கைகள் மற் றும் மருத்துவ பரிசோதனை கூடம் உள்ளது. ஆனாலும் போதிய பணியா ளர்கள் இல்லாத காரணத்தால் மருத் துவமனை செயல்படாத நிலையில் உள்ளதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை முறையாக தூய்மை படுத்தாத காரணத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதேபோல் இரண்டாவது வார்டு பகுதியில் மக்கள் பயன்படுத்த முடி யாத நிலையில் சாலைகளில் சாக் கடை நீர் செல்வதைச் சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவ ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் மனு தரப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா குழு உறுப்பினர் ஆறுமுகம், காந்தி, மாரிமுத்து, மாசிலாமணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.