districts

img

நல்லாற்றை தூர்வார சிபிஎம் மனு

அவிநாசி, டிச.8- அவிநாசி அருகே நல்லாற்றை தூர்வார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று பூண்டி பேரூராட்சி செயல் அலு வலரிடம் மனு அளித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லாறு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் புதர் மண்டி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், மழைநீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத நபர் களால் கோழி, மீன், உள்ளிட்டு பல்வேறு  இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டப்படு வதால் நீர் மாசுபடுகிறது.  இதையடுத்து, எதிர்காலத்தில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர்த்துவ தற்கு வழிவகை செய்ய வேண்டும். விவ சாயத்துக்குத் தேவையான பல இடங்களில் சிறு தடுப்பணைகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் சுள்ளிக்காடு அருகே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் விரைவில் தங்கள் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என தெரிவித்தார்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடா சலம், ஒன்றிய குழு உறுப்பினர் பால சுப்பிரமணியம், சிஐடியு முன்னாள் நிர்வாகி  நடராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜ், ஈஸ்வரன், திமுக நகர பொறுப்பாளர் பாரதி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.