districts

img

மதுபானக் கடை அமைக்க சிபிஎம் எதிர்ப்பு

பொள்ளாச்சி, மே 7- பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில்  பொதுமக்களை பாதிக்கும் வகையில் புதிதாக அமைய உள்ள தனியார் மதுபான கடை அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரி வித்துள்ளனர்.  இதுதொடர்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அ.கேத்தரின் சரண்யாவிடம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு வில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சி – கோவை சாலையில் வடக்கிபாளையம் பிரிவில் தனியார் மதுக்கடை அமைக்க, கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. இச்சாலை அதிகமான வாகனங்கள் சென்று வரும் பகுதியாகும். மேலும், இது குடியிருப் புகள் அதிகம் உள்ள பகுதியாகும். ஏராள மான மாணவர்கள் கல்விச்சாலைக்கு இந்த  வழியாகவே செல்கின்றனர். ஏற்கனவே,  அந்த பகுதியில் அதிக விபத்துக்கள் நடை பெற்ற காரணத்தால், நடுப்புணியிலிருந்து வந்து சேர்கிற வாகனங்கள் அனைத்தும் சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பாதை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இங்கு மதுபானக்கடை அமைக்கப்பட்டால், இப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூரை ஏற்படுத்தும், எனவே,  ஆரம்ப நிலையிலேயே இந்த மதுபானக் கடை கட்டிடப் பணிகளை உடனடியாக  நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சி யர் அ.கேத்தரின் சரண்யா உரிய நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முன்னதாக இந்த மனு அளிக்கையில், சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் ஏ.அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே.மகாலிங்கம், வி.பாலகுருசாமி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் மணியாழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.