districts

img

எழுச்சியோடு துவங்கியது சிபிஎம் நீலகிரி மாவட்ட மாநாடு

உதகை, நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட 12 ஆவது மாநாடு கூட லூரில் சனியன்று எழுச்சியோடு துவங்கி யது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்த, கிளை மாநாடுகள் துவங்கி, இடைக்குழு மாநாடுகள், மாநகர மாநாடுகள், மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடு கள் என நாடு முழுவதும் கட்சி மாநாடு கள் நடைபெற்று வருகிறது. அனைத்து  மாநிலங்களின் மாநாடுகள் நிறைவுற்ற பின்னர், மதுரையில் அடுத்த ஆண்டு அகில இந்திய மாநாடு நடைபெற உள் ளது. இம்மாநாடுகளின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட 12 ஆவது மாநாடு கூட லூர் காந்தி திடலில், என்.சங்கரய்யா  நகரில் (ஜானகி அம்மாள் மண்டபம்) சனியன்று துவங்கியது. இரண்டு நாட் கள் நடைபெறும் இம்மாநாட்டின் துவக்க நிகழ்வு சனியன்று நடைபெற் றது. மாநாட்டை வழிநடத்தும் தலை மைக்குழுவாக பி.ரமேஷ், ஏ.வி.ஜோஸ், கே.ராஜன், ஏ.நவீன்சந்திரன், ஆர்.இளங்கோவன், வி.மணிகண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக, பந்தலூரில் இருந்து பி.முக மது நினைவாக கொடியும், அம்பல முலாவில் இருந்து வி.டி.ரவீந்திரன் நினைவு கொடிக்கம்பமும், கல்விச்சால்  பி.தமிழ்மணி நினைவாக கயிறும், உதகை வி.வி.கிரி, குன்னூர் ஏ.முகம் மது சித்திக், கோத்தகிரி எஸ்.ராஜேந்தி ரன் ஆகியோர் நினைவு ஜோதி ஆகிய வைகள் மாநாட்டு அரங்கத்திற்கு எழுச்சி முழக்கங்களோடு கொண்டு  வரப்பட்டது. இதனை கட்சியின் தலை வர்கள் என்.வாசு, எம்.ஆர்.சுரேஷ், எஸ். தங்கராஜ், எம்.ஏ.குஞ்சு முகம்மது, சி.கே.மணி, கே.பி.கவுசல்யா ஆகி யோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கட்சியின் மாநாட்டு கொடியை கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் லீலா வாசு ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பிரநிதிகள் மாநாடு துவங்கி யது. மாநாட்டு அறிக்கையை நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் முன்மொழிந்தார். இம்மாநாட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, கே.நாகராஜ் ஆகியோர் பங் கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதனைய டுத்து, புதிய மாவட்டக்குழு மற்றும்  மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக் கப்பட உள்ளனர். ஞாயிறன்று மாலை  தோழர் சீத்தாராம் யெச்சூரி நகரில் (சுங் கம் திடல்) செந்தொண்ட அணிவகுப் பும், பொதுக்கூட்டமும் நடைபெற உடள் ளது. இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் துணைச்செய லாளர் டாக்டர் வி.சிவதாசன் எம்பி., உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.