கோவை, ஜூன் 28- அன்னூரில் ஒன்பது மாதங்களாக குடியிருப்பு களை சூழ்ந்துள்ள மழைநீரால், வீடுகள் இடிந்து உயிரிழப்பு ஏற்படும் என்கிற அச்சம் நிலவி வந்த நிலையில், ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் அலட் சியமாக சென்றதை கண்டு ஆவேசமடைந்த பொது மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக் குட்பட்ட புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகள் அருகே அன்னூரிலேயே மிகப்பெரிய குளமான கோவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்திலிருந்து வெளி யேறும் உபரிநீர், ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வழிப்பாதையின்றி குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. நீன்ட நாட்களாக தண்ணீர் தேங்கி யிருப்பதால், புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசிவருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களாக தண் ணீர் தேங்கியுள்ள நிலையில், பல மாதங்களாக அரசு அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு நடந்து நடந்து மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், வெள்ளியன்று மழைநீர் வடி கால்களை கண்டறிய கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில், கோட்டாட்சி யர் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் அப்பகுதி யில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், தேங்கி யுள்ள தண்ணீரை பார்வையிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் பிரச்சனை குறித்து பேச முயன்றபோது, அதை காதில் வாங்காமல் அங்கிருந்து நகர்ந்தனர். இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள், தங்களிடம் பேச மறுப்பதா கக்கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதை யடுத்து பொதுமக்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அதிகாரிகள், கோவன்குளத்தையும், அதன் கரைப்பகுதியையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக புகார்களை முன் வைத்துள்ளனர். இப்பகுதியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாக இப்பிரச்சனை மிகத்தீவிரமாக இருந்து வருகிறது. இங்குள்ள குடியிருப்புகள் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்து, தேங்கியுள்ள தால் ஈரப்பதம் காரணமாக வீடுகளில் விரிசல் மற் றும் உறுதித்தண்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வீடுகள் எப் போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலை உள்ளது. எனவே, வீடுகள் இடிந்து அதில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பதற்கு முன்பாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.