உடுமலை,அக்.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலூகா 24 ஆவது மாநாட்டில் தாலூகா செயலாளராக ஆர். வி.வடிவேல் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருப்பூர் மாவட் டம், மடத்துக்குளம் தாலூகா மாநாடு தோழர் சீத்தாரம் யெச் சூரி, தோழர் என். சங்கரய்யா நினைவரங்கத்தில் (தான்யா ஸ்ரீ திருமண மண்டபம்) புதனன்று நடை பெற்றது. தாலூகா குழு உறுப்பினர் எம்.எம். வீரப்பன் தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் தாலூகா குழு உறுப்பி னர் ராஜரத்தினம் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம். ராஜகோபால் மாநாட்டை துவக் கிவைத்து பேசினார். தாலூகாச் செயலா ளர் ஆர்.வி. வடிவேல் அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயபால் வாழ்த்தி பேசினார். இதில், மடத்துக்குளம், கணியூர் மற்றும் சங்கரமநல்லூர் பேரூராட்சியில் ஊராக வேலை திட்டத்தை அமல்படுத்த வேண் டும். கொமரலிங்கம் பேரூராட்சியில் ஊராக வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும். மடத் துகுளம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் மருத்து வர்களை நியமனம் செய்ய வேண்டும் மேலும் அங்கு அவரசர சிகிச்சை பிரிவு செயல்படுத்த வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து நடைமுறை படுத்தும் கூட்டுகுடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி தாலூகா முழுவதும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். அம ராவதி சர்க்கரை ஆலையை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். கொழுமம், கணியூர் மடத்துக்குளம் பகுதியில் நிரத் தர நெல் கொள்முதல் நிலையைம் செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் 11 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது, தாலுகா செய லாளராக ஆர்.வி. வடிவேல் தேர்வு செய் யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன் உரையாற்றினார். முடி வில் காந்தி நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து, மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை விளக்கி மாலையில் கொமரலிங்கம் பேருந்து நிலையம் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.