districts

கோவையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை:

கோவை, மே 4- கோவையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், இது  தொடர்பாக கோவை மாவட்ட ஆட் சியரை சந்தித்து மனு அளித்தனர்.  கோவை மாவட்டத்தில் கோடை  வெப்பம் அதிகரித்து வரும் நிலை யில் பொதுமக்கள் குடிநீர் தேவை களுக்காக மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர்‌. மேலும் குடிநீர் பிரச்சனை யிலிருந்து பொதுமக்களை காக்க உடனடியாக தலையிட வேண்டும் என மனு அளித்தனர். அம்மனு வில் கூறியிருப்பதாவது, குடிநீர் இருப்பு - நீர் விநியோக நேரம் குறித்து மின் வாரிய நிர்வாகம் போல் வாட்ஸ் அப் மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம ஊராட்சி பேரூ ராட்சி நிர்வாகங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள சுயமாக லாரிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் நிலத்தடி நீர்  எடுத்து விற்பனை செய்வோர் நீரை சுத்திகரிப்போர் (RO) லாரிகளில் குடிநீர் விநியோகிப்போர் என தொழில் செய்பவர்களிடம் பேசி பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப நீர் விநியோகத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். மேலும் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக  மாவட்டம் முழுவதும் உள்ள குளம்,  குட்டைகள், நீர் வழிப்பாதைகளை  தூர்வாரி ஒழுங்குபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் னதாக ஆட்சியரை சந்தித்து மனு  அளிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் யு.கே.சிவ ஞானம், அஜய் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.