districts

img

பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, ஏப்.6- ஊராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லப்பம்பாளையம் கிளை  சார்பில் செவ்வாயன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற் றது.  கிளை செயலாளர் பிரபுராம் தலைமையில் நடைபெற்ற  இப்பிரச்சாரத்தில், ஊராட்சி பகுதிகளில் இருக்கும் ஆழ்கு ழாய் கிணறுகளை சரிசெய்ய வேண்டும். மாசாணியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கிராம சாலைகளை புதுப்பிக்க   வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுடுகாடு பகுதிக ளில் இருக்கும் புதர்களை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க  வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கால்நடை மருத்துவமனைக ளில் கூடுதல் அறைகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகேஷ்வரி, தமிழ்தென்றல் மற்றும் சாளையூர்  காளிமுத்து, தேவனூர்புதூர் ஆறுச்சாமி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.