திருப்பூர், அக்.9- வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோ ருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது, திருப்பூர் பாண்டி யன் நகர் பகுதியில் செவ்வாயன்று ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆறு வயது பெண் குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் புத னன்று இறந்துள்ளது. உழைப்பாளி மக்கள் நெருக்கமாக வாழும் குடியி ருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் மற் றும் பொருட்கள் சேதம் அடைந்துள் ளன. எனவே இப்பகுதியில் காயம டைந்த, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மையான சிகிச்சை வழங்கவும், வீடு கள், உடமைகள் இழந்தவர்களுக்கு உரிய முழுமையான நிவாரணம் வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்த விபத்து நடைபெற்ற இடத் தில், நாட்டு வெடி குண்டு தயாரிப்ப தற்கு பயன்படுத்தக்கூடிய பல கிலோ கிராம் ரசாயனங்களை காவல்துறையி னர் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் ஆபத்தான வெடி பொருட்கள் பெருமளவு வைத்து நாட்டு வெடி குண்டு தயாரித்தது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது. அரசு நிர்வாகம், காவல் துறையின் கண்காணிப்பில் குறைபாடு இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே குவாரிகளில் பயன்படுத் தக்கூடிய வெடி மருந்து பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிக மாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதி களில் அதிக அளவு வெடிபொருட்களை குவாரிகளில் பயன்படுத்துவதால் நில அதிர்வு போன்ற பாதிப்புகளை அந்த வட்டாரங்களில் மக்கள் உணர்ந்துள்ள னர். அரசின் அனுமதி பெற்று விற்கப் பட வேண்டிய வெடி பொருட்கள், ரசா யனம் தாராளமாக கிடைப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவ தாக பாண்டியன் நகர் வெடி விபத்து உள் ளது. எனவே தமிழக அரசு, காவல்துறை முறையான தீவிர கண்காணிப்பு, சட்டப் படி உறுதியான நடவடிக்கை மேற் கொண்டு இனி, இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.