திருப்பூர், நவ.18- திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விசயத்தில் இரட்டை வேடம் போடா மல், மக்களைப் பாதிக்கும் கொள்கைக ளுக்கு எதிராகப் போராட அதிமுக முன்வர வேண்டும். அதிகாரத்தில் யார் இருக்கிறார் கள் என்பதைப் பார்த்து நாங்கள் போராடுவ தில்லை, மக்கள் நலனே எங்களுக்கு முக்கி யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயற் குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் சொத்து வரி, குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தின் கார ணமாக உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்ட தாக மாநில அரசு கூறுகிறது. இது ஒரு வகை யில் உண்மையாக இருந்தாலும், மக்கள் மீது வரி உயர்வை சுமத்தக் கூடாது. ஒன்றிய அர சுக்கு எதிராக வலுவான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். மேலும், மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச் சுமை களை உடனடியாகத் திரும்பப் பெற வேண் டும். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தியபோது, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்.12 ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எழுத்துப் பூர்வ மாகவும் மாநகராட்சி நிர்வாகத்தின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தவிர கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்க ளைத் திரட்டிப் போராட்டம் நடத்தியதோடு, வரி உயர்வை திரும்ப பெற மாநகராட்சி மேயரை சந்தித்தும் வலியுறுத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், அதிமுக மாமன்றக்குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி பேசியிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது. அதிமுக கடந்த காலங்களில் மாமன்ற பொறுப்பில் இருந்தபோதும் சொத்து வரி, மற்றும் குடிநீர் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இதை எதிர்த்த மார்க்சிஸ்ட் கட் சியின் ஒரே மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பனைப் பார்த்து கேலி பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங் கள் நடத்தியதை அடுத்து அதிமுக அரசு வரி உயர்வை திரும்பப் பெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத் தில் ஆக்கிரமிப்பு செய்யும் மாநிலம் மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை மார்க் சிஸ்ட் கட்சி சமரசமின்றி எதிர்த்து வருகிறது. யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்து போராடுவது கிடையாது. மக்களைப் பாதிக்கும் பிரச்சனையில் யார் அதிகாரத்தில் இருந்தாலும் எதிர்த்துப் போராடுவோம். அதிமுக, மக்கள் நலனைவிட குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகி றது. பதவியில் இருந்தபோது வரியை உயர்த் திவிட்டு, பதவியில் இல்லாதபோது எதிர்ப் பது இரட்டை வேடம் ஆகும். மாவட்ட மாநாடு தீர்மானிக்கும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்த மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சொத்து வரி விதிப்பு பிரச்சனையில் பலதரப் பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரை விட பெரிய நகரமான சென்னை, கோவை உள் ளிட்ட மாநகராட்சிகளை விட திருப்பூரில் கூடு தலாக வரி விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூ ரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப் போர் ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் வரி செலுத்த வேண்டும். அதுவும் 2022ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.9 ஆயிரம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்ற னர். இதை ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வீடில்லாத மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், ஆனைமலை நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தெரு நாய்களால் விவசாயிகளின் கால்நடை கள் கொல்லப்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கி புனர மைத்து இயக்க வேண்டும். வேலம்பட்டி சுங் கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் எதிர்ப்பது உள்ளிட்ட பிரச்சனை கள் குறித்து டிசம்பர் 1, 2 தேதிகளில் அவிநா சியில் நடைபெறும் கட்சியின் மாவட்ட மாநாட் டில் விவாதித்து போராட்டம் நடத்த திட்டமிடு வோம், என்று கூறினார். இந்த சந்திப்பின்போது மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.மூர்த்தி ஆகியோர் உடனி ருந்தனர்.