அவிநாசி, ஆக.12- மக்களை பாதிக்கும் மதுபான கடை கள் எதுவாக இருந்தாலும் உடனடி யாக அகற்ற வேண்டும் என அவிநாசி யில் மனமகிழ் மன்றத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித் துள்ளார். அவிநாசியில் செங்காடு திடலில் மன மகில் மன்றம் அமைக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், வணிகர் சங்கம் உள்ளிட் டவை சார்பில் திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், மக் களை பாதிக்கக்கூடிய, மனமகிழ் மன் றம், டாஸ்மாக் கடைகள் எதுவாக இருந் தாலும் அதை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக பள்ளி அருகே செயல்படும் மனமகிழ் மன்றம், புதிய பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை, கால்நடை மருத்து வமனை அருகே செயல்படும் மதுபான கடை உள்ளிட்டவைகளால் பொதுமக் கள் பாதிப்புக்கு உள்ளாக்கின்றனர். புதிய பேருந்து நிறுத்தம் அருகில் செயல்படக்கூடிய மதுபான கடையி னால், வேலைக்கு செல்லும் தொழிலா ளர்கள், பயணிகள் மிகவும் பாதிக்கப்ப டுகின்றனர். கால்நடை மருத்துவமனை அருகில் செயல்படும் மதுபானக் கடை, தகரத்தை வைத்து மறைத்தால் சாலை மறைந்து விடும் என்ற அர்த்தத்தில் கடையை மறைத்து விற்பனை நடந்து வருகிறது. மேலும், திருமுருகன்பூண் டியில் திருப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அப்புறப் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.