அவிநாசி, ஜூன்.25 புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம் புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட புஞ்சை தாமரைக் குளம், ஆதிதிராவிடர் காலனி, ஆதராம்பாளையம், நமச்சிபாளை யம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் (நல்ல தண்ணீர்) பல மாதங்களாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. ஆனால் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் இரண்டும் கலந்து வருவ தால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சுத்தமான குடிநீர் வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமா ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட் டது. மனுவை பெற்றுக் கொண்ட அலுவ லர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். இதில் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.பழனிச்சாமி ஒன்றியக் குழு உறுப்பி னர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.