districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு: போராட்டம் நடத்த சிபிஎம் முடிவு

உடுமலை, ஜன.28- செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற் சிக்கும் அணிக்கடவு ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக, மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், அணிக்கடவு ஊராட்சியில் ஞாயிறன்று கிராமசபை கூட்டம் நடைபெற் றது. அப்போது, திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தின்  வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர், 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கூட்டுக்குடிநீர் திட்ட துணை பொறியாளரிடம் முறையிட்டனர். மேலும், ஒரு வார  காலத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால் மக்களை திரட்டி குடிமங்கஙம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தனர். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் செந்தில்குமார், ராஜேஷ் குமார், ரமேஷ் ஆகியோர் பங் கேற்றனர்.

ஒன்றிய பட்ஜெட்: விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு, ஜன.28- ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக் கையில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் இரா.வேலுச்சாமி வெளி யிட்ட அறிக்கையில், இந்தியாவில் விவ சாயத்திற்கு அடுத்தபடியாக பெரும் வேலை வாய்ப்பு அளிப்பது ஜவுளித் துறை. ஜவுளி துறையில் இதயமாக செயல்பட்டு வரும் விசைத்தறி தொழில் பல லட்சம் தொழிலாளர்களுக்கும் நேரடியாகவும் மற்றும் மறைமுகமா கவும் வாழ்வாதாரமாக உள்ளது. இந் திய பொருளாதாரத்தில் குறிப்பாக ஜிஎஸ்டி வருமானத்தில் ஜவுளி துறை யின் பங்கு பெரிதும் உள்ளது. இந்நிலையில், விசைத்தறிகள் கடந்த சில ஆண்டுகளாக பழைய இரும் புக்கு உடைக்கும் நிலைக்கு சென் றுள்ளது. கொரோனா காலகட்டம், ரஷ்யா உக்ரைன்  போரினாலும், உலக  பொருளாதார வீழ்ச்சியாலும் விசைத் தறி நெசவு பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. எனவே, ஒன்றிய அரசு இந்த வரு டம் நிதிநிலை அறிக்கையில் விசைத் தெறிக்கென்று தனியாக முன்னேற்றம் ஏற்படும் வகையில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு என்று  தனியாக நிதி ஒதுக்கப்படும். அதில் விசைத்தறியாளர்கள் நலனுக்கான நிதி  எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக் கும். ஆனால் தற்போது எம்எஸ்எம்ஈ மூலம் மொத்தமாக நிதி ஒதுக்கப்பட்டு அதில் ஜவுளி துறையினர் பயன் பெற் றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் எவ்வளவு நிதி ஜவு ளித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது, அதனை விசைத்தறியாளர்களுக்கு எவ்வளவு என்பதை அறிய முடிய வில்லை.  விசைத்தறி மேம்பாட்டிற்காக குறிப்பாக சாதா விசைத்தறிகளை நாடா யில்லா விசைத்தறிகளாக மாற்ற அரசு 50 விழுக்காடு மானியத்துடன் நிதி  ஒதுக்க வேண்டும். மேலும், விசைத் தறிக் கூடங்களுக்கு சூரிய மின்னொளி திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற் கும் மானிய விலையில் சலுகை அளிக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்க ளுக்கு முன் பிஎல்ஐ திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதில் ரூ.100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு 50 கோடி மானியத்தை 5 வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரி வித்திருந்தது. சென்ற ஆண்டு ரூ.50 கோடியாக குறைத்தது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் ஒரு திட்டத்தை  அறிமுகப்படுத்தி அதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் முதல் அதிகபட்சம் 5 கோடிக்குள் முதலீடு செய்யும் அல்லது மேம்படுத்தும் விசைத்தறியாளர்களுக்கு 50 விழுக் காடு மானியம் கொடுக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் குறைந்த பட்சம் ரூ.1500 கோடிக்கு மேல் நிதியை  ஒன்றிய அரசு ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள் ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு ஆயுள் தண்டனை உதகை, ஜன.28- காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பெற் றோருடன் வசித்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு, வீட்டில் இருந்த சிறுமியிடம், அங்கு பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் அருண் (35), சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி செபஸ்டின் அருண் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இத னையடுத்து சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெற் றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரி சோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்  இது  குறித்து தேவாலா மகளிர் காவல் நிலையில், புகார் அளித்தார். புகாரின் பேரில் தேவாலா போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்.23 ஆம் தேதியன்று செபஸ்டின் அருணை கைது செய்தனர். வழக்கு விசாரணை  மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து   வந்தது.  இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட செபஸ்டின் அருணுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த வழக் கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதா டினார்.

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

நாமக்கல், ஜன.28- பள்ளிபாளையம் பகுதியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவ தாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூர் கிராம ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசா யம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், விவ சாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு முக்கிய தேவையாக உள்ள வாய்க்கால், கடந்த காலங்களில் சுமார் 80 அடி அள விற்கு இருந்துள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு காரண மாக 10 முதல் 20 அடிக்குள்ளாகவே வாய்க்கால் ஓடை இருப்பதால், நீர்வரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்குவதால், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தி லும், அரசு அலுவலகங்களிலும் புகார் தெரிவித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், சாக்கடை கால்வாய் முறையாக அமைக் கப்படாதாலும் மக்கள் அதிகம் புழங்கும் சாலையில் சாக் கடை கழிவுநீர் செல்லும் வகையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று பாதிப்பு  ஏற்படுகிறது. மேலும், கட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கூடம் ஆபத்தான முறை யில் இயங்கி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே  நிதி ஒதுக்கப்பட்டும், பணிகள் துவங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்ச னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைபாடான குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், ஜன.28- குறைபாடுடைய குடிநீர் சுத்தி கரிப்பான் வழங்கிய நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப் பீடு வழங்க வேண்டும், என நாமக் கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங் கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா.  ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண் டம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங் கோட்டையன். இவர்கள் இருவரும் நாமக்கல்லில் கோட்டை மெயின் ரோட்டிலுள்ள அக்வா கேர் ஆரோ சிஸ்டம் என்ற கடையில், வீட்டுக் காக தண்ணீர் சுத்திகரிப்பான் உப கரணங்களை கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கியுள்ளளனர். விற் பனை செய்யப்படும் வகை உபகர ணம் 6 லிட்டர் கொள்ளளவு கொண் டது என்று விற்பனையாளர் தெரி வித்ததால், ஒவ்வொரு உபகரணத் துக்கும் ஒவ்வொருவரும் ரூ.20 ஆயிரம் செலுத்தியுள்ளனர். வீட் டில் அதனை பொருத்திய பின்பு தண்ணீரின் கொள்ளளவை அள விட்ட போது நான்கு லிட்டர் மட் டுமே பிடிக்கக் கூடியதாக உபகர ணம் இருந்துள்ளது.   விற்பனை செய்த கடைக்காரரிடமும், உபகர ணத்தை உற்பத்தி செய்த கெண்ட் ஆரோ சிஸ்டம் நிறுவனத்திடமும் பலமுறை புகாரளித்தும், ஆறு லிட் டர் கொள்ளளவு கொண்ட உபகர ணம் வழங்கப்படவில்லை. இதனால் பிரேமா மற்றும் செங் கோட்டையன் ஆகியோர் உபகர ணத்தை விற்பனை செய்த கடைக் காரர் மற்றும் உற்பத்தி செய்த நிறு வனத்தின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந் தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தனி யாக வழக்கு தாக்கல் செய்தனர்.  இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் செவ்வாயன்று தீர்ப்பு  வழங்கினர். அதில், பணம் செலுத்தி யது ஆறு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணத்துக்கு என் றும், ஆனால் வழங்கப்பட்டது நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணம் என்றும் சாட்சி யம் மற்றும் ஆவணங்கள் மூலம்  வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூ பித்துள்ளனர். உபகரணத்தை விற் பனை செய்த கடைக்காரர் நுகர் வோர் பாதுகாப்பு சட்ட விதிகளின் படி ரசீது வழங்கவில்லை என்றும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி விற்பனை செய்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது. எனவே,  வழக்கு தாக்கல் செய்துள்ள ஒவ் வொருவருக்கும் உபகரணத்தை  விற்பனை செய்த கடைக்காரர் இழப் பீடாக ரூ.30 ஆயிரமும், உபகரண உற்பத்தி நிறுவனம் ரூ.20 ஆயிர மும் வழங்க வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி

நாமக்கல், ஜன.28- எலச்சிபாளையம் அருகே விஷ வண்டு கள் தினசரி பொதுமக்களை தாக்கி வந்த  நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை யால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், சமத்துவபுரம் எதிரில் உள்ள சின்ன எலச்சி பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியி லுள்ள முருகன் கோவில் அருகே பழமை வாய்ந்த புளியமரத்தில் எண்ணற்ற விஷ வண்டுகள், தினசரி பொதுமக்களை தாக்கி  வந்தது. இதனால் இக்கோவிலுக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் ச.உமாவிற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து ஆட்சியரின் பரிந்துரை யின் பேரில், திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் திங்களன்று மாலை தீயணைப்பு வாகனத்தின் மூலம் விஷ வண்டுகள் அகற்றி னர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அனைத் துத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

‘கல்வியில் முழுமையான வளர்ச்சி’ குறித்த கருத்தரங்கம்

நாமக்கல், ஜன.28- ‘கல்வியில் முழுமையான வளர்ச்சி’  குறித்த தேசிய கருத்தரங்கம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில், ‘கல்வியில் முழு மையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கே.எஸ்.ஆர்  கல்லூரி முதல்வர் பி.சுரேஷ் பிரபு வரவேற் றார். தாளாளர் ர.சீனிவாசன், துணைத்தாளா ளர் கே.எஸ். சச்சின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாக இயக்குநர் வி.மோகன், ‘நவீன உலகில் மாற்றத்துக்கேற்ற கல்வி யின் முக்கியத்துவம்’ குறித்து வலியுறுத்தி னார். கேரளா மத்திய பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத்தலைவர் கே.முருக பூபதி ராஜா, ‘கல்வியின் தற்போதைய சூழ லின் முக்கியத்துவம்’ குறித்த பொதுப் பார் வையை வெளிப்படுத்தினார். மதுரை அமெரிக் கன் கல்லூரியின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ் குமார் முருகேசன், ‘கல் வியும், மனித நலனும் தொடர்புடைய துறை களின் பண்பு’ களை விவரித்தார். இரண்டு அமர்வுகளாக தொடர்ந்த கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர் கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக வும், இணைய வழியாகவும் தங்களின் ஆராய்ச் சிக் கட்டுரைகளை வழங்கினர். முடிவில், கே.எஸ்.ஆர் கல்லூரி உதவிப் பேராசிரியர் மு.பிரபா நன்றி கூறினார்.

மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்

நாமக்கல், ஜன.28- குமாரபாளையம் அருகே நடுநிலைப் பள்ளி ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல்  ரீதியாக அத்துமீறுவதாகக்கூறி, பெற்றோர் கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதி யில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபு ரிந்து வரும் நந்தகுமார் என்பவர், மதிய நேரங் களில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாண விகளை தனது கைகளை அமுக்கி விடுமாறு கூறுவதுடன், பாலியல் ரீதிகயாக அத்துமீறு வதாக மாணவிகள் கூறிய தகவலின் அடிப் படையில், செவ்வாயன்று திடீரென பள் ளியை மாணவிகளின் பெற்றோர்கள் முற்று கையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல் துறையினர் மற் றும் வட்டாட்சியர் சிவக்குமார், ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்த சென்றனர். அப் பொழுது நந்தகுமார் விடுப்பில் உள்ளதால், கல்வித்துறை அதிகாரிகளை வரவழைத்து மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதன்பின் ஆசிரியரிடம் விசா ரணை நடத்தி, துறை ரீதியான அளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதாந்திர உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை

நாமக்கல், ஜன.28- நிறுத்தப்பட்ட மாற்றுதிறனாளி களுக்கான மாதந்திர உதவித்தொ கையை மீண்டும் வழங்க நடவ டிக்கை எடுக்கிறோம் என மாற்றுத் திறனாளி மூதாட்டியிடம் அதிகாரி கள் உறுதியளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள ஒட்ட மெத்தை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்தவர் மாரக்கா (62). கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியே வசித்து வரும் மூதாட்டி மாரக்கா விற்கு பிறவியிலேயே கண் பார்வை  தெரியாது. மேலும், இரண்டு கால்க ளும் செயலிழந்த மாற்றுத்திறனாளி யாக உள்ள நிலையில், உறவினர் கள் யாருமின்றி சிறிய வாடகை வீட் டில் தனித்து வாழ்ந்து வருகிறார். மாற் றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதந்தோறும் ரூ.1500 வழங் கப்பட்ட நிலையில், கடந்த மூன்று  மாதங்களாக திடீரென நிறுத்தப்பட் டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி மாரக்கா, மீண்டும் மாற் றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை தனக்கு வழங்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியருக் கும், அரசு துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மனுக்களை வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் வாழ்வாதாரத்திற்கு வரு வாய் இன்றி தவித்து வருகிறார். மேலும், ஆதார் அட்டை எடுத்து வந் தால் மட்டுமே மாற்றுத்திறனாளிக ளுக்கான தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வும், ஆனால் இரண்டு கண்களும் முழுமையாக தெரியாத நிலையில் நிலையில் உள்ள தனக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருணை அடிப்படையில் நிறுத்தப்பட்ட மாதாந் திர உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்த செய்தி ஊடகங்க ளில் வெளியானதையடுத்து, செவ் வாயன்று நாமக்கல் மாவட்ட ஆட்சி யரின் அறிவுறுத்தலின்படி, குமார பாளையம் சமூக பாதுகாப்பு திட்ட  அலுவலர் மாதேஸ்வரி, பள்ளிபா ளையம் வருவாய் ஆய்வாளர் ஜெக தீஸ், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட் டோர் சம்பந்தப்பட்ட மூதாட்டி நேரில் சந்தித்து அவருடைய குறைகளை கேட்டறிந்தனர். நிச்சயமாக மீண்டும் உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக, அதிகாரிகள் உறுதியளித்தனர்.