திருப்பூர், ஆக. 7 - திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உறுதிய ளிப்புத் திட்டத்தில், வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கிராமப்புறங்க ளில் வறுமையின் விளிம்பில் சிக்கி யிருக்கும் மக்கள் பட்டினிச்சாவில் சிக்காமல் தடுக்கும் வகையில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட் டம், இடதுசாரி கட்சிகளின் அழுத் தம் காரணமாக ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சிக் காலத் தில் நிறைவேற்றப்பட்டது. இது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்க ளில் கிராமப்புற பட்டினிச்சாவை தடுத்து அந்த மக்களின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்துக்கு உதவி யாக இருந்து வந்தது. வேலையின்மை அதிகரிப்பு பிரதமர் மோடி தலைமை யிலான 10 ஆண்டு கால பாஜக அரசு பின்பற்றிய பொருளாதார கொள் கைகளால் நாடு முழுவதும் வேலை யில்லாத் திண்டாட்டம் மிக மோச மான அளவுக்கு அதிகரித்திருக் கிறது. விலைவாசி உயர்வு வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளது. அனைத்துப் பகுதி மக்களும் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள னர். குறிப்பாக கிராமப்புற பொரு ளாதாரம் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட் டத்தை சீர்குலைக்கும் நோக்கத் தோடு பாஜக அரசு செயல்பட்டு, நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி யது, இதன் விளைவாக நாட்டின் பல் வேறு மாநிலங்களிலும், தமிழகத்தி லும் நூறு நாள் வேலைத்திட்டம் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகி றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு ஊராட்சி களில் வேலை அட்டை வைத்திருப் போருக்கு முழுமையாக வேலை வழங்காமல் மறுக்கப்படுகிறது. வேலை செய்தவர்களுக்கும் வழங்க வேண்டிய ஊதியம் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட் டது. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் பட்ஜெட் இந்த சூழ்நிலையில் மூன்றா வது முறையாக பொறுப்பேற்றி ருக்கும் பிரதமர் மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசின் நிதி நிலை அறிக் கையை, கடந்த ஜூலை 23ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத் தாராமன் தாக்கல் செய்தார். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சு வதாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நூறு நாள் வேலைத்திட் டத்திற்கு ஒதுக்கீடு செய்ததை விட குறைவான தொகையாக ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் 2024 ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான தொகை ரூ.41ஆயிரத்து 500 கோடி செலவு செய்யப்பட்டு விட் டது. மீதம் இருக்கும் ரூ.44ஆயி ரத்து 500 கோடி மட்டுமே அடுத்த எட்டு மாத காலத்துக்கு செலவிட முடியும். இது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை மக்களுக்கு செய்துள்ள மிகப்பெரும் அநீதியாகும். இத னால் கிராமப்புற மக்களின் துயரம் இன்னும் கொடுமையாக அதிகரிக் கும் என்பதே இதன் அர்த்தம். வேலைவாய்ப்பை விரிவுபடுத்துக இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு, தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத் திற்கான நிதி ஒதுக்கீட்டை கணிச மான அளவு அதிகரிக்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், தினசரி ஊதியத்தை ரூ.600ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இத்து டன் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இத்திட்டத்தை முழுமையாக விரிவு படுத்த வேண்டும். பல்லாயிரக்க ணக்கானோர் வேலை பெற்று வரும் இத்திட்டத்தை சீரழிக்கக் கூடாது. இணைப்பை கைவிடுக! தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட் டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதி களை அருகாமை மாநகராட்சி, நக ராட்சிகளுடன் இணைக்கத் திட்ட மிட்டுள்ளது. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை பெறும் ஏழை மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப் படும் ஆபத்து உள்ளது. எனவே கிராம ஊராட்சிகளை நகரங்களு டன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இத்துடன் கிரா மப்புறத் தொழிலாளர்களுக்கு வீட் டுமனைப் பட்டா வழங்க வேண்டும், நிலமுள்ளவர்களுக்கு வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கி றது. அணிதிரள்க! இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சி யர் அலுவலகம், உடுமலைப் பேட்டை வருவாய்க் கோட்டாட் சியர் அலுவலகம் ஆகிய அரசு அலு வலகங்கள் முன்பாக ஆயிரக்க ணக்கான நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை அணிதி ரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. அனைத்துப் பகுதி கிராமப்புற, நகர்ப்புற உழைக்கும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலிமையான முறையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்த முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக செ. முத்துக்கண்ணன் கூறியிருக்கி றார்.