districts

img

துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூலை 29- அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்  முத்துசாமி, துப்புரவுப் பணியாளர்க ளுக்கு மாதந்தோறும்  முறையாக ஊதி யம் வழங்க  வலியுறுத்தியுள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர்கள் கூட்டம் வெள்ளியன்று ஊராட்சி  ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமை யில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி பேசுகையில், ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர்களுக்கு வழங்கப்படும். சுற்றறிக் கைகளில் சில வாசகங்கள் ஆங்கிலத் தில் உள்ளது அதைத் தமிழில் மொழி யாக்கம் செய்து வழங்க வேண்டும், கணி யம் பூண்டி ஊராட்சியில் கழிவுநீர் தனி யாருக்குச் சொந்தமான இடத்தில் விடப் பட்டு வருகிறது ,  இட உரிமையாளர் சாக் கடை நீரைத் தடுத்து விட்டால் மிகப் பெரிய பாதிப்புகள் உண்டாக்கும் அதை  உடனடியாக கவனத்தில் கொண்டு தீர்வு  ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மதுரா நகர் பகுதியில் அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும், மின் வாரிய அலுவலகம்( ஏடி) மங்கலத் தில் செயல்பட்டு வருகிறது

தற்போது அனுப்பர்பாளையம் பகுதிக்கு மாற்றப் படுவதால் மக்களுக்குச் சிரமம் ஏற்படு கின்றது. எனவே அவிநாசி எல்லையில் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய  வேண்டும், வேளாண்துறை சம்பந்த மான நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக் குத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் களுக்குத் தான்  தகவல் வருகிறது ஒன் றிய கவுன்சிலர்களுக்கு தகவல் வருவ தில்லை, எதிர்காலத்தில் முறைப்ப டுத்தி அனைவருக்கும் தகவல் சென்ற டைய வழிவகை செய்ய வேண்டும். மேலும் ஊராட்சியில் பணியாற்றும் துப் புரவுப் பணியாளர்களுக்கு  மாத ஊதி யம் முறையாக வருவதில்லை  இதை முறைப்படுத்தி மாத தோறும்  ஊதியம் வழங்க வேண்டும், வஞ்சிபாளையம் மேம்பாலம் பழுதடைந்து  உள்ளது இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத் தில் செல்கின்றனர்  இதை உடனடியாக  சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.  இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய தலை வர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவ லர் உள்ளிட்டவர்கள் தங்கள் கோரிக் கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப் படும் எனத் தெரிவித்தனர்.