திருப்பூர், ஜூலை 28- மக்கள் பிரச்சனைகளை வலியு றுத்தி, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனைப் பிரச்சார இயக் கங்களில் ஈடுபட்டனர். கோவை - சேலம் - ஈரோடு வழித்த டத்தில் இயங்கும் அனைத்து பேருந்து களும் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கழிப்பிடம் உடனே அமைத்து கொடுக்க வேண் டும். செங்கப்பள்ளி நால்ரோட்டில் கோபி பேருந்து நிறுத்தம், ஊத்துக்குளி பேருந்து நிறுத்தம், கோவை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கப்பள்ளி ஊராட்சி கிளைகள் சார்பில், ஞாயி றன்று செங்கப்பள்ளி மேம்பாலம் அருகே தெருமுனைப் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு செங்கப்பள்ளி கிளைச் செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், தாலுகாச் செயலாளர் கொளந்தசாமி, தாலுகாக்குழு உறுப்பி னர்கள் வி.காமராஜ், ஆர்.மணியன், விவசாய சங்க தாலுகாத் தலைவர் மணி என்கிற சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.
தாராபுரம்
தாராபுரம் அரசு மருத்துவம னையை மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு துவங்க வேண்டும். நக ரில் மலைபோல் குவிந்துள்ள குப்பை களை அகற்ற வேண்டும். கழிவுநீர் வடிகால்களை தூர்வார வேண்டும். நிறுத்தப்பட்ட பேருந்துகளை கிரா மங்களுக்கு இயக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சனியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்ட னர். இந்நிகழ்விற்கு கட்சியின் தாலுகாக் குழு உறுப்பினர் எஸ்.சதீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தாலுகாச் செயலாளர் என்.கனகராஜ், தாலுகாக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன், சிஐடியு நிர்வாகி பொன்னுசாமி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி மேகவர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார இயக்கம் மார்க்கெட், கடைவீதி, ஐந்து முக்கு வழியாக சென்று வடகரை நாடார் தெருவில் நிறைவு பெற்றது. உடுமலை உடுமலை பேருந்து நிலைய விரி வாக வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும். மழைநீர் சாலைகளில் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நகரில் கொல்லம் பட்டரை தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் ஓடை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் உடுமலை நகரக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. உடு மலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். இதில் கிளைச் செயலாளர் சையது இப்ராஹிம் மற்றும் அப்பாஸ், பார்த்திபன், மணிகண்டன், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
மடத்துக்குளம்
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். மடத்துக் குளம் அரசு மருத்துவமணையை தரம் உயர்த்தி பரிசோதனை ஆய்வகம் மற் றும் கூடுதல் மருத்துவர்களை நிய மனம் செய்ய வேண்டும். வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு அரசு இல வச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும். மடத்துக்குளம் பகுதியில் உள்ள நான்கு பேரூராட்சி களிலும், தேசிய ஊரக வேலை திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் மடத்துக்குளம் தாலுகாக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தாலூகாச் செயலாளர் ஆர்.வி.வடிவேல் தலைமை வகித்தார். இதில் தாலூகாக்குழு உறுப்பினர்கள் எம்.எம்.வீரப்பன், ராஜரத்தினம், பன் னீர்செல்வம், வேடபட்டி ஈஸ்வரன், மாசணி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மடத்துகுளம் தாலூகா விற்குட்பட்ட 11 ஊராட்சி மற்றும் நான்கு பேரூராட்சியின் பகுதிகளான 24 மையங் களில் இந்த பிரச்சார இயக்கம் நடை பெற்றது.
அவிநாசி
வடுகபாளையம் ஊராட்சிக்குட் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும். நஞ்சைத்தாமரைக்குளம் ஆதிதிரா விடர் காலனி பகுதியில் மழைநீர் தேங் காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பேருந் துகள் இயக்கப்பட வேண்டும். தெருக் களில் மின்கம்பம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பெரிய ஒலப்பாளையம் விளையாட்டு மைதானத்தை புதுப் பித்து தேவையான உபகரணங்கள், காட்டுவளவு பகுதிக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நி லைத்தொட்டி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச் சிக்கு கிளைச் செயலாளர் ஆர்.தங்க ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.ராமசாமி, ஆர்.அய்யம்மாள், ஆர்.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றி யச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட் டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஏ.சண்முகம், ஏ.ராஜன், என்.கருப்புசாமி, பி.குமார சாமி, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சி லர் கௌரி மணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர்
இஎஸ்ஐ மருத்துவமனையை முழு மையாக செயல்படுத்த வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். பெருமாநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்து வமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சிபிஎம் திருப்பூர் வடக்கு ஒன்றி யக்குழு சார்பில் பெருமாநல்லூர் அங் கேரிப்பாளையம், வாவிபாளையம், பிச் சம்பாளையம் ஆகிய நான்கு மையங்க ளில் இருந்து மக்கள் சந்திப்பு வாக னப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், ச.நந்தகோபால், மாவட்டக் குழு உறுப்பினர் எ.சிகாமணி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் என்.கோபால், இளங்கோ, பாண்டியன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நான்கு மையங்களில் இருந்து புறப்பட்ட வாக னப் பிரச்சாரம் பாண்டியன் நகரில் நிறைவு செய்யும் வகையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
வேலம்பாளையம்
வேலம்பாளையம் பகுதியில் 5 மையங்களில் மக்கள் சந்திப்பு பிரச் சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், கிளைச் செயலாளர்கள் பிரவீன், ரகுபதி, முத்துக்குமார், சிவராஜ், சிவக்குமார், வெள்ளியங்கிரி, சரவண குமார், நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ், சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.