districts

img

ஏழை மக்களை குடியிருப்புகளிலிருந்து விரட்டியடிக்காதே

ஈரோடு, ஜன.8- நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று  சொல்லி ஏழை மக்களை குடியிருப்பு களிலிருந்து அகற்றுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சியில், பாதாளச் சாக்கடை இணைப்பின் பெயரில் பொதுமக்களிடம் ஒப்பந்ததாரர்கள் வசூலிக்கும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். சீரழிந்த சாலைகளை செப்பனிட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லி ஏழை மக்களை குடியிருப்புகளிலிருந்து மாற்று ஏற்பாடுகள் இன்றி அகற்றுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். ஈரோடு நகர்  காளைமாடு சிலை அருகில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன் மற்றும் ஆர்.கோமதி, சி.முருகேசன், எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் என்.எஸ்.ரவி நன்றி கூறினார்.