districts

img

விலை உயர்வை கட்டுப்படுத்து! வேலைவாய்ப்பை உருவாக்கு! மோடி அரசுக்கு எதிராக சிபிஎம் பிரச்சாரம்

திருப்பூர், செப். 4 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தவறிய ஒன் றிய பாஜக அரசை கண்டித்து வரும் செப்டம் பர் 7 ஆம் தேதி மறியல் போரட்டம் நடைபெற  உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற் கொள்ளும் இப்போராட்டதின் நோக்கத்தை விளக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஞாயிறன்று நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில் வெங்கமேடு, குமரன் காலனி, செட்டிபாளையம், இந்திரா நகர், பாண்டியன்நகர், தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல், கூலிபாளையம்,  வாவிபாளை யம், சேடர்பாளையம், குருவாயூரப்பன் நகர்,  மூகாம்பிகை நகர், அடுக்குமாடி குடியிருப்பு, ஜே.ஜே.நகர், கருக்கங்காட்டு புதூர், வள்ளிபுரம்,  தட்டான்குட்டை, காளிபளையம், பெருமாநல் லூர் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சா ரம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கே.காமராஜ் துவக்கி வைத்து பேசினார். பிரச் சார இயக்கத்தில் வடக்கு ஒன்றியப் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் தெள.சம்சீர் அகமது, ஒன்றியக்குழு உறுப் பினர் என்.இளங்கோ, பி.மகாலிங்கம், எஸ்.பானு மதி, ஏ.சந்தோஷ், பி.கே.கருப்புசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

அவிநாசி:

அதேபோல அவிநாசியிலும் மோடி அரசின்  மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரம் திருமுருகன்பூண்டி நக ராட்சி, பூண்டி பேருந்து நிலையம், அம்மாபாளை யம், ராக்கியாபாளையம், அவிநாசி ஒன்றிய  பகுதிகளில் நடுவச்சேரி, கருக்கங்காட்டுப்புதூர், வடுகபாளையம், பச்சாம்பாளையம், புஞ்சை தாமரைகுளம், போத்தம்பாளையம், சேவூர், பாரதிநகர், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், செல்வபுரம், கருணைபாளையம், புளைக்காட்டு பாளையம் உள்ளிட்ட இடங்களில், தெருமுனைப் பிரச்சாரம்  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, திருமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிசாமி,  பூண்டி நகரமன்ற உறுப்பினர் சுப்பரமணியம்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி யம், மோகனசுந்தரம், கருப்புசாமி, விவசாய  தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகம்,  விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி  முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி:

ஊத்துக்குளி:

ஊத்துக்குளியில் நடைபெற்ற பிராச்சார இயக் கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் துவக்கி வைத்தார். தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் இந்த பிரச்சார இயக்கத்தில், தாலுக்கா குழு உறுப்பினர் ஆர்.மணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கு.பாலமுரளி, மூத்த தோழர்  நடராஜ், ஆர்.எஸ்.கிளை ராஜா, ரங்கசாமி, ஆறு முகம் கரைப்பாளையம் கருப்புசாமி, குன்னம்ப ளையம் சின்னச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து  கொண்டனர். இதேபோல் கடந்த 1ஆம் தேதி பல்லகவுண் டன்பாளையம் முதல் குன்னத்தூர், செங்கப் பள்ளி வரை நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு தாலுக்கா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர்.குமார், தாலுக்கா செயலாளர்  எஸ்.கே.கொளந்தசாமி, தாலுக்கா குழு உறுப்பி னர்கள் ஆர். மணியன், க.பிரகாஷ், குன்னத்தூர்  கிளைச் செயலாளர் பா.சின்னச்சாமி, ப.க. பாளையம் கிளை செயலாளர் கே.கண்ணை யன், இன்ஜினியரிங் சங்க மாவட்டச் செயலா ளர் ஜெ.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாநகரம்:

கட்சியின் தெற்கு மாநகரப் பகுதியில் நடை பெற்ற பிரச்சார இயக்கம் காங்கேயம் ரோடு சி டி சி கார்னர், புஷ்பா நகர், வெங்கடேஸ்வரா  நகர், மிசின் வீதி, திருப்பூர் தியாகி குமரன் சிலை,   சூசையாபுரம், கல்லம்பாளையம்,  செல்லம் நகர்  பிரிவு, கே.வி.ஆர். நகர், கருவம்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உண்ணிகிருஷ்ணன் துவக்கி வைத்து  பேசினார். பிரச்சார இயக்கத்தில் தெற்கு மாநக ரச் செயலாளர் த.ஜெயபால், மாவட்டக்குழு உறுப் பினர் பி.செல்லதுரை, மாநகரக்குழு உறுப்பி னர்கள்  பி.பாலன், பா.ஞானசேகர், எஸ்.பானு மதி, நா.சஞ்சீவ், கிளைச் செயலாளர்கள் யூ.நாசர்  அலி, எம்.ரமேஷ், எம்.மதிவாணன், ஐ.லாரன்ஸ்,  முகமது ஜாபர், டி.மினி, வாசுமலை, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.ஈஸ்வரமூர்த்தி, ஆட்டோ  சங்க செயலாளர்  எஸ் .சிவராமன், பனியன் ஏரியா  கமிட்டி செயலாளர் ஆர்.சக்திவேல் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். 

தாராபுரம்:

தாராபுரத்தில் தெருமுனை பிரச்சார இயக் கம் தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலை மையில் நடைபெற்றது. தாராபுரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை முன்பு, ஐந்துமுனை  சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பொன்னுச்சாமி, முத்துச்சாமி, கண்ணுசாமி, ராம சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், 15.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில்,  அனுப்பர்பாளையம் புதூர், சாமுண்டிபுரம், வேலம்பாளையம் ஆகிய இடங்களில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் தெற்கு ஒன்றியம்: மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் மத்திய மோடி அரசை கண்டித்து செரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ராமர்  தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிர மணியம், குணசேகரன், கிளைச் செயலாளர் கே. ஈஸ்வரன், பொது தொழிலாளர் சங்கத் தலைவர்  ஏ.சண்முகம், கட்டுமான சங்க தலைவர் எம். எஸ்.பிச்சை, ரயில்வே தொழிற்சங்க முன்னாள்  நிர்வாகி சாம்பசிவம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.