உடுமலை, ஆக.31- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து வரும் 7 ஆம் தேதி உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. பொது மக்களை பாதிக்கும் ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளை பொது மக்களிடம் அம்பலப்படுத்தும் வகை யில் பிரச்சாரம் இயக்கம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் போடி பட்டி பகுதியில் தொடங்கிய பிரச்சார இயக்கம் தெய்வசீகமணி பட்டிணம், யூனியன் அலுவலகம், காந்தி சதுக்கம், நகராட்சி அலுவலகம் முன்பு, குட்டைத் திடல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கொல்லம்பட்டரை, தங்கமாள் ஓடை மற்றும் வனத்துறை அலுவலகம் முன்பு வரை நடைபெற் றது. இந்த பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா ளர் தண்டபாணி தலைமை ஏற்றார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனண், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.