கோவை, ஜன.8- பேரிடர் நிகழ்ந்த இடத்தில் பெரும்பணியாற்றிய மின் ஊழியர்களுக்கு சிபிஎம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அன்மையில் பெஞ்சால் புயல் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்கும் பணியில், ஊண்,உறக்கம் ஏதுமின்றி உழைத்திட்ட மின் ஊழியர் கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் பணியாற்றி னர். அத்தகைய பணியை மேற்கொள்ள கோவை மாவட் டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திருவாச்சனூர் கிராமத்திற்கு சென்ற உதவி மின்பொறியாளர்கள் ஜி.வி ஜய், பி.ஆனந், முகவர், சுப்பிரமணியபிள்ளை, மின் துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, கேங்மேன்கள் நவீன் குமார், பிரியதர்ஷன், சுகன், பட்டணம் உதவி மின்பொறி யாளர் என்.குண சேகரன் ஆகியோர் சென்று, களப்பணி யாற்றி விட்டு திரும்பி உள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வு டன் பணியாற்றிவிட்டு திரும்பிய மின் ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பட்டணம் கிளை சார்பில் அன்மை யில் பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பட்டணம் கிளையின் மூத்த தோழர் தே.சிவராஜூ தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் கிருஷ்ணன் குட்டி வரவேற்றார். முன்னதாக, மீட்புப் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தங் கள் பணியில் பெற்ற அனுபவங்களைப் பற்றி உரை யாற்றினர். முடிவில் விஜயன் நன்றி கூறினார்.