திருப்பூர், டிச.18- வணிக வாடகை கட்டிடங்களுக்கு ஜிஎஸ்டி விதித்த ஒன்றிய அரசைக் கண்டித்தும், மின் கட்டணத்தை உயர்த்திய மாநில அர சைச் கண்டித்து, வியாபாரிகள் புதனன்று நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. வியாபாரிகளின் உணர்வுகளைப் புரிந்து கெண்டு ஒன்றிய, மாநில அரசுகள் இந்த வரிகளைக் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் புதனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வணிக அடிப்படை யிலான வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவி கித ஜிஎஸ்டி, மாநில அரசின் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை மாநில அரசு கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் திருப் பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள் ளிட்ட அனைத்துப் பகுதி வியாபாரிகளும், வர்த்தகர்களும், முழுமையாக பங்கேற்ற கடையடைப்பு போராட்டம் பெரும் எழுச்சி யுடன் நடைபெற்றுள்ளது. இதில் முழுமை யாக பங்கேற்ற அனைத்துப் பகுதி வியாபார பெருமக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றி வரும் கார்ப்பரேட் ஆதரவு தாராளமயக் கொள்கை களே இந்த கடுமையான வரி உயர்வுகளுக்கு முக்கிய காரணமாகும். ஒன்றிய அரசு நேரடி யாக ஜிஎஸ்டி விதித்து நெருக்கடியை ஏற்ப டுத்துவதுடன், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதிக்குழு மானியங்கள் மற்றும் இதர நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு கள் வரிகளை உயர்த்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதும் முக்கிய காரணமா கும். மேலும் ஜிஎஸ்டி மூலம் அனைத்து சிறு, குறு தொழில்களை அழித்தொழிக்கும் ஒன் றிய பாஜக தலைமையிலான அரசு, வாட கைக்கு ஜிஎஸ்டி விதிப்பது பாதிப்பை ஏற்ப டுத்தாது என்று சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவதாக, இரட்டை வேடம் போட்டு ஏமாற் றப் பார்க்கிறது. போராடும் அனைத்து தரப் பினரும் இதனை கண்டு ஏமாற மாட்டார்கள். அத்துடன் ஒன்றிய அரசின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மாநில அரசு மக்கள் தலை யில் சுமைகளை கூட்டும் வகையில் வரிகளை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்துவதை கைவிட வேண்டும். தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான, திருப்பூரை மையப் படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரி கள், வர்த்தக நிறுவனங்கள் கடை அடைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ள இந்த உணர்வு களை மதித்து, ஒன்றிய மோடி அரசும், மாநில திமுக அரசும் வரிகளைக் கைவிட வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.