districts

img

திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் மதுபானக் கடையா? சிபிஎம் கோபாவேச எதிர்ப்பு போராட்டம்

திருப்பூர், நவ. 10 – திருப்பூர் மாநகராட்சி 31ஆவது வார்டு பிரிட்ஜ்வே காலனியில் பொது மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் நிர்வாகமே, சட்ட விரோதமான முறை யில் மதுபானக் கடை திறக்கும் நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபாவேச ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பிரிட்ஜ்வே காலனியில் டி.எம்.எப்.பாலத்திற்கு வடமேற்கு பகுதி யில் மதுபான கடை திறப்பதற்கு கடந் த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்த து. அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.  மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப் புத் தெரிவித்து பொதுமக்களிடம் கை யெழுத்துப் பெற்ற மனுவை, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர் எஸ்.சண்முகசுந்தரம், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் பா. சௌந்தரராசன், ஒய்.அன்பு உள்ளிட் டோர் டாஸ்மாக் மேலாளர் அலுவ லகத்தில் அளித்தனர்.

அதன் பிறகு கடை திறக்கும் முயற்சி நின்று போனது. எனினும் சரியாக ஓராண்டு ஆன நிலையில் தற்போது அதே இடத்தில் மதுபானக் கடையைத் திறக்கும் நடவ டிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடு பட்டுள்ளது. வேறொரு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை எண்ணை பொருத்தி, அங்கு இரவோடு இர வாக மதுபான பாட்டில்களைக் கொண்டு வந்து வைத்து, விற்பனை யைத் தொடங்கியுள்ளனர். இது இப் பகுதி மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பிரிட்ஜ்வே காலனியில் மேற் கண்ட டாஸ்மாக் கடை அருகே ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப் பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாந கரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரரா சன் தலைமை வகித்தார். இதில் மது பானக் கடையை திறப்பதற்கு எதிர்ப் புத் தெரிவித்தும், திமுக ஆட்சிக்கு  வந்தா மதுபானக் கடைகள் எண் ணிக்கை குறைக்கப்படும் என்று  முதல்வர் பிரச்சாரம் செய்த நிலை யில், புதிதாக மதுபானக் கடைக ளைத் திறக்க முயற்சிப்பதைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட் டன.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூரின் இதயப் பகுதியாகத் திக ழும் இந்த இடத்தில் ஏராளமான பனி யன் கம்பெனிகளும், குடியி ருப்புகளும் நிறைந்துள்ளன. பெண் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இப்ப குதியில் பயணிக்கும் நிலை உள்ள து. அத்துடன் டிஎம்எப் பாலம் வழியா க குமரன் சாலை பகுதிக்கும், அப்பகு தியில் இருந்து வடக்குப் பகுதிக்கு வருவதற்கும் முக்கியமான போக்குவரத்து பாதையாகவும் இந்த இடம் உள்ளது. இங்கு மதுபானக் கடை திறப்பது, இளம்பெண் தொழி லாளர்கள் மற்றும் குடியிருப்பு பகு தியில் உள்ள பெண்கள் மத்தி யில் பெரும் அச்சத்தையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் இந்த இடத்தில் கடை அமைக்கக் கூடாது. மீறி கடையைத் திறந்து நடத் த முயற்சி செய்தால் பொது மக்க ளைத் திரட்டி கடைக்கு பூட்டுப் போட் டு வலுவான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்ச ரிக்கை விடுத்தனர். இதில் கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி அணியினர் மற்றும் அப்பகுதி பெண்கள் உள் ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.