districts

img

விடுபட்டுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை

திருப்பூர், அக்.13- விடுபட்டுள்ள அனைவருக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என, சிபிஎம் 15.வேலம்பாளையம் நகரக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் 15 வேலம்பாளையம் நகர 5  ஆவது மாநாடு ஞாயிறன்று வி.பி. சுப்பிரமணியம் நினைவரங்கத்தில் நடை பெற்றது. நகரக்குழு உறுப்பினர்கள் நவபா லன், ரகுபதி, சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். செங்கொடியை மூத்த தோழர்  சி.நாச்சிமுத்து ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு செயலாளர் எம்.வீரமுத்து வரவேற் றார். நகரக்குழு உறுப்பினர் பி.சின்னசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.சாவித்திரி, கே.ரங்க ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். நகரச் செயலாளர் ச.நந்த கோபால் அறிக்கையை முன் வைத்தார். வேலம்பாளையம் அரசு மருத்துவமனையை விரை வில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழக  அரசு உடனடியாக பாத்திர தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு  கட்டித்தர வேண்டும். மகளிர் உரிமைத் தொகையை விடுபட்டுள்ள அனைவருக் கும் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும். அணைப்பாளையம் ரயில்வே  மேம்பால கட்டுமானப் பணிகளை விரை வுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் நகரச் செயலாளர்க ச.நந்த கோபால் மற்றும் 13 பேர் நகரக்குழு உறுப்பின ராக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் நிறைவுரையாற்றினார்.