districts

img

ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டித்தருக

சேலம், டிச.9- ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே கட்டித்தர வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. சேலம் சீலநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர் களின் பயன்பாட்டிற்காக கடந்த 36 ஆண்டு காலமாக இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மாநக ராட்சி நிர்வாகம் இடித்து தரைமட்ட மாக்கியது. அதேபோல் 50 ஆண்டு  காலமாக இயங்கி வந்த கால்நடை  மருத்துவமனையும் இடிக்கப்பட் டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில், இடிக்கப்பட்ட சுகாதார நிலையத்தை உடனே கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச்  செயலாளர் ஆர். ராஜி தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தை  மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி துவக்கிவைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி மாவட்ட குழு உறுப்பினர் ஆர். வைர மணி, பி.ரமணி, மாநகர குழு உறுப்பி னர் எம்.சி.சேகர் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குண சேகரன் முடித்து வைத்தார். இதில் கட் சியின் முன்னணி ஊழியர்கள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.