கோவை, செப்.17- தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஞாயிறன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, புலியகுளத்தில் உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு தமுஎகச மற்றும் மாதர் சங்கம் சார்பில் மரி யாதை செய்யப்பட்டது. இந்நிகழ் வில், தமுஎகச சார்பில் கோவை மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்ட நிர்வாகி மு.ஆனந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சுதா, மாவட்டத் தலைவர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், தமுஎகச வெள்ள லூர் கிளை சார்பாக பெரியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது.இதில், மாவட்ட நிர்வாகி இ.வெ.வீரமணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே, திராவிடர் விடுதலைக் கழகம் சார் பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. இந்த நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப் பாண்டி, மாவட்டச் செயலாளர் மு. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக பள்ளி பாளையம் - வெப்படை நான்கு வழிச்சாலையில் தந்தை பெரி யாரின் 145ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி பாளையம் ஒன்றியச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.