16 சிறைவாசிகள் விடுதலை
16 சிறைவாசிகள் விடுதலை கோவை, மார்ச் 28- சிறை மெகா அதாலத் நீதிமன்றம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சிறை மெகா அதா லத் நீதிமன்றம், புதனன்று கோவை மத்திய சிறையில் நடை பெற்றது. இதில் இந்த 4 மாவட்ட நீதிமன்ற பகுதிக்குட்பட்ட சமரசம் செய்யக்கூடிய சிறு குற்றங்களில் தொடர்புடைய சிறைவாசிகளின் குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர் சிவா சிறை அதாலத்தை துவக்கி வைத்தார். கோவை மத்திய சிறை எஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித் தார். கோவை மாவட்டத்தில் சிறு குற்ற வழக்குகளில் தொடர் புடைய 18 சிறை வாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 சிறைவாசிகளின் 3 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டு கோவையை சேர்ந்த 13 கைதிகள் மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 கைதிகள் என 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் நிலுவையில் உள்ள வழக்கு களின் பொருட்டு விடுவிக்கப்படவில்லை.
எம்எல்எப் அலுவலக வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் கெடு: சு.துரைசாமி பேட்டி
திருப்பூர், மார்ச் 28 - கோவை டாடாபாத்தில் உள்ள எம்எல்எப் சங்க அலு வலக கட்டிடத்தை கைப்பற்றியது தொடர்பான நீதிமன்ற வழக்கை நான்கு மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத் தரவிட்டிருப்பதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி கூறினார். திருப்பூர், கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி வியாழனன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை டாடாபாத்தில் உள்ள எங்கள் சங்க அலுவலகத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைப் பற்றிக்கொண்டு, பொய்யான ஆவணங்களை நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். எங்களையும் அனுமதிக்கவில்லை. எங்கள் சங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை அப்பு றப்படுத்த வேண்டும், அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங் களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 2010ஆம் ஆண்டு ஏப். 12-ஆம் தேதி கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நி லையில் கடந்த 14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பினை வழங்கினார். அதில் கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வரும் வழக்கு விசார ணையை 4 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தாமதப்படுத்தக்கூ டாது என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது எங்கள் சங்க தின் 12 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.
மக்களின் தேவையறிந்து உழைப்பேன் பொள்ளாச்சி திமுக வேட்பாளர்கள் உறுதி
கோவை, மார்ச் 28- பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் என் னென்ன தேவை என்பதையறிந்து உடனே நிறைவேற்றி கொடுக்கப் பாடுப டுவேன் என திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி வாக்குறுதி அளித்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகு தியில் திமுக வேட்பாளராக போட்டி யிடும் கே.ஈஸ்வரசாமி, நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பல்வேறு இடங் களில் கூட்டணி கட்சியின் தலைவர் களுடன் வாக்கு சேகரித்து வருகிறார். இதில், கோவை தெற்கு மாவட்டத் திற்குட்பட்ட ஆனைமலை கிழக்கு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளிலும் வாக்குகளை சேகரித்து வருகிறார். திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி செல்லும் பகுதிகள் எங்கும், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின்போது, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் என் னென்ன தேவை என்பதையறிந்து உடனே நிறைவேற்றி கொடுக்க பாடுப டுவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, அனைத்து திட்டங்களையும், மக்க ளுக்கு சென்றடைய பாடுபடுவேன். இந்தியா தலை சிறந்த நாடாக மாறவும், மக்களின் துயர் போக்க வும், இந்தியா கூட்டணிக்கு வாக்க ளியுங்கள் என உதயசூரியன் சின்னத் திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதிமுருகேசன், காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் பகவதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் உடன் சென்றனர்.
பேருந்தை வழிமறைத்த யானை
ஈரோடு,மார்ச் 28- ஈரோடு, சத்தியமங்க லத்தில் இருந்து தலமலை வரை செல்லக்கூடிய அரசு பேருந்து வனச்சாலை வழி யாக சென்று கொண்டு இருந் தது. அப்பொழுது நெய்தாள புரம் கிராமத்தில் இருந்து முதியனூர் சென்று கொண் டிருந்தபோது, திடீரென ஒற்றை காட்டு யானை சா லையின் குறுக்கே வந்து நின்றது. பின்னர், பேருந்தை நோக்கி வேகமாக ஓடி வந்து பெரும் குரலெடுத்து பிளிர்ந் தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்ற மடைந்தனர். பின்னர், சிறிது நேரம் நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்தே பயணிகள் அச்சம் நீங்கினர்.
குறையும் ஆழியாறு அணை நீர்மட்டம்
கோவை, மார்ச். 28- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு அணைகளின் நீர் மட்டம் வெகுவாக சரிந்து காணப்படுகிறது. இந்நிலை யில் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை யின் நீர்மட்டம் வியாழனன்று காலை 7 மணி நிலவரப்படி 55.55 அடியாக உள்ளது. வினாடிக்கு 174 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், 260 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக அணையின் பாதி நிலையை தண்ணீர் இருப்பு எட்டி உள்ளதால் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர். விரைவாக நீர் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபா யம் உள்ளது.
திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு ஏற்பு
அதிமுகவின் புகார் மனு தள்ளுபடி
சேலம், மார்ச் 28- சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டிஎம்.செல்வகண பதியின் வேட்புமனு நிறுத்தி வைக் கப்பட்ட நிலையில், உரிய விளக்கத் திற்குப் பிறகு ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப் பாக சேலம் நாடாளுமன்ற தொகுதி யில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக் கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நி லையில், வியாழனன்று வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத் தும் அலுவலர் பிருந்தா தேவி தலை மையில் நடைபெற்றது. இதில் 39 வேட்பாளர்களும், ஆதரவாளர்க ளும் கலந்து கொண்டனர். இதனி டையே, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகண பதி, கடந்த மார்ச் 25 ஆம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், செல்வ கணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாக, அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தற்காலிகமாக செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின் டிஎம். செல்வகணபதி விளக்கம் அளிக்க 3 மணி வரை அவகாசம் கேட்ட நிலை யில், இரண்டு மணி வரைக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவகாசம் கொடுத்தார். இதைய டுத்து சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டிஎம்.செல்வகணபதி வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தங்கள் தரப்பு விளக்கத்தை செல்வகணபதி யின் வழக்கறிஞர்கள் மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரிடம் தெரி வித்தனர். இதையடுத்து திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. தேர்தல் விதிமு றைகளில் கொடுத்த புகார் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் விடுதலை என்பவர் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், அதிமுக வழக்க றிஞர்கள் செல்வகணபதியின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட் டியலில் உள்ளது என்றும், இதுதவிர அவர் மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து முழுவதும் வேட்புமனுவில் தெரி விக்கவில்லை என்றும், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்த னர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி வித்து, உரிய ஆவணங்களை தேர் தல் அதிகாரிகளிடம் வழங்கினோம். சேலம் மேற்கு தொகுதியில் இருந்து வீடு மாற்றும் போதே ஏற்கனவே நீக்கல் படிவம் அவர் கொடுத்துள் ளார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை யும் முன்வைத்து பேசினோம். எனவே அதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
கே.சுப்பராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
ஈரோடு, மார்ச் 28- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்க டாசலம் வாக்கு சேகரித்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் திமுக ஒன் றிய கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பி னருமான அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் இந் தியா கூட்டணி வேட்பாளராக திருப்பூர் நாடா ளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.சுப்ப ராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்ட மன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் சங்கரா பாளையம் ஊராட்சியில், ராஜீவ்நகர் பகுதி யில் உள்ள பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை சொல்லியும், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையையும் எடுத் துச்சொல்லியும் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி, சிபிஎம் தாலுகா செயலா ளர் ஆர். முருகேசன், மதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் உத்திரசாமி, சிபிஐ தாலுகா துணை செயலாளர் அப்புச்சாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாகன சோதனைக்கு அனுமதித்த ஆ.ராசா
வாகன சோதனைக்கு அனுமதித்த ஆ.ராசா உதகை, மார்ச் 28- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வந்த வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை நடத்த வந்த போது, காரில் இருந்து இறங்கி சோதனை செய்ய அனு மதித்தனர். நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் 4 ஆவது முறையாக போட்டி யிடும் ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாவட்ட திமுக கழக செயலாளர் பா. முபா ரக் உள்ளிட்டோர் உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோத்தகிரி அருகே ராசாவின் வாகனம் சென்று கொண்டிருக் கும் போது தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து ஆ.ராசா மற்றும் சுற் றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி சோதனை செய்ய அனுமதித்தனர். பின்பு வாகனத்தில் எதுவும் இல்லாததால் ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.
தபால் ஓட்டுக்கு அனுமதி வழங்க, ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை
தபால் ஓட்டுக்கு அனுமதி வழங்க, ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை கோவை, மார்ச் 28- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும், தபால் ஓட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90 சதவிகிதத பணியாளர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள். இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும். அதுமட்டுமின்றி, இதை காரணம் காட்டி விடுப்பும் மறுக்கப்படுகிறது. இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தங்களுக்கும் தபால் ஓட்டு வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடிகள்?
நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம்தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி, தமிழகத் தில் வேட்பு மனு தாக்கல் புதனன்று நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, வியாழ னன்று வேட்புமனு பரிசீலனை செய்யப் பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட் பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலை யில், இந்த பரிசீலனை நடைபெற்றது. இதில் அண்ணாமலை தரப்பில் 2 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனு வில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலை யின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை. அதாவது, நம்பர் 26ஆம் தேதி விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற் றப்பின்னணி வரிசை படுத்தவில்லை என வும், வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இட மானது முறையாக குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டினர். திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சுயேட்சை கட்சிகளின் வழக்க றிஞர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரி யான கிராந்தி குமார் பாடி முன்னிலை யில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி ஆட்சே பனை தெரிவித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண் டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இத னால் அறையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு களை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடி யாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரி வித்து அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி தருமபுரி, மார்ச் 28- தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியு றுத்தி பாலக்கோட்டில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், மாநில ஊரக மற்றும் நகர்புர வாழ்தார இயக்கம் சார்பில், 100 சதவிகித வாக் குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. முன்னதாக, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதைத்தொ டர்ந்து பேரணி துவங்கி பாலக்கோடு பேருந்து நிலையம் வழி யாக ஊர்வலமாக சென்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தன பிரியா, வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவ லர் எம்.சுருளிநாதன், பேரூராட்சி செயலர் டார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி, ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் உண்டியல் பணத்தை பதுக்கிய ஊழியர்கள் மீது வழக்கு
கோவில் உண்டியல் பணத்தை பதுக்கிய ஊழியர்கள் மீது வழக்கு சேலம், மார்ச் 28- செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது, 2 பணக்கட்டுகளைப் பதுக்கிய ஊழியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் இந்துசமய அற நிலையத்துறைக்குச் சொந்தமான பிரசன்ன வெங்கடாச லபதி கோவில் உள்ளது. இங்குள்ள உண்டியலை அவ்வப் போது திறந்து, அதிகாரிகள் முன்னிலையில் பணத்தை எண்ணுவது வழக்கம். அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்.2 ஆம் தேதி இணை ஆணையர் தலைமையில் உண்டி யலைத் திறந்து பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் பணம் எண்ணும் காட்சிகள் அனைத்தும் அங்கி ருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு வந்தது. கோவில் டிக்கெட் விற்பனை ஊழியர்கள் இருவர், இரண்டு பணக்கட்டுகளை எடுத்து பதுக்கிய காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது பின்னர் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி, இதுகு றித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித் தார். பணத்தை எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை யும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, பணத்தைப் பதுக்கிய கோயில் ஊழியர்கள் செல்லமுத்து, ஜெயசூரியன் ஆகியோர் மீது செவ்வாய்ப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
16 சிறைவாசிகள் விடுதலை
16 சிறைவாசிகள் விடுதலை கோவை, மார்ச் 28- சிறை மெகா அதாலத் நீதிமன்றம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 சிறைவாசிகள் விடுதலை செய் யப்பட்டுள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சிறை மெகா அதாலத் நீதி மன்றம், புதனன்று கோவை மத்திய சிறையில் நடைபெற் றது. இதில் இந்த 4 மாவட்ட நீதிமன்ற பகுதிக்குட்பட்ட சமரசம் செய்யக்கூடிய சிறு குற்றங்களில் தொடர்புடைய சிறைவா சிகளின் குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சிவா சிறை அதாலத்தை துவக்கி வைத்தார். கோவை மத்திய சிறை எஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கோவை மாவட்டத்தில் சிறு குற்ற வழக்குகளில் தொடர் புடைய 18 சிறை வாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 சிறைவாசிகளின் 3 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு கோவையை சேர்ந்த 13 கைதி கள் மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 கைதிகள் என 16 பேர் விடு தலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் பொருட்டு விடுவிக்கப்படவில்லை.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தருமபுரி, மார்ச் 28- பென்னாகரம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ரேசன் கடை ஊழியருக்க 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிரா மத்தைச் சேர்ந்தவர் கணேசன் (54). ரேசன் கடையில் விற்பனை யாளராக பணிபுரிந்து வரும் இவர், 9 வயது சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகு றித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின் முடி வில் கணேசன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதைய டுத்து கணேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்கத் துல்லா தீர்ப்பளித்தார்.
கோடை வெப்பம் அதிகரிப்பு விறுவிறுவென குறையும் ஆழியாறு அணையின் நீர்மட்டம்
கோவை, மார்ச். 28- கோடை காலம் நிலவி வருவதால், ஆனைமலையை அடுத்த ஆழியார் ஆணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் வெகு வாக சரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் வியா ழனன்று காலை 7 மணி நிலவரப்படி 55.55 அடியாக உள்ளது. வினாடிக்கு 174 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், 260 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்ப டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். சராசரியாக அணையின் பாதி நிலையை தண்ணீர் இருப்பு எட்டி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். விரைவாக நீர் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பயிர்க ளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என விவசாயிக ள் வேதனை அடைந்துள்ளனர்.
எம்எல்எப் அலுவலக வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் கெடு: சு.துரைசாமி பேட்டி
திருப்பூர், மார்ச் 28 - கோவை டாடாபாத்தில் உள்ள எம்எல்எப் சங்க அலுவலக கட்டிடத்தை கைப்பற்றி யது தொடர்பான நீதிமன்ற வழக்கை நான்கு மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருப்பதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி கூறினார். திருப்பூர், கோவை பெரியார் மாவட்ட திரா விட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி வியாழனன்று திருப்பூரில் செய்தியாளர்களி டம் கூறுகையில், கோவை டாடாபாத்தில் உள்ள எங்கள் சங்க அலுவலகத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைப்பற் றிக்கொண்டு, பொய்யான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எங்க ளையும் அனுமதிக்கவில்லை. எங்கள் சங்கத் துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை அப்பு றப்படுத்த வேண்டும், அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 2010ஆம் ஆண்டு ஏப். 12-ஆம் தேதி கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த 14-ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒரு தீர்ப்பினை வழங்கினார். அதில் கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வரும் வழக்கு விசார ணையை 4 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தாமதப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது எங் கள் சங்கத்தின் 12 ஆண்டு கால சட்ட போராட் டத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.
டி.எம்.செல்வகணபதி தீவிர பிரச்சாரம்
சேலம், மார்ச் 28- சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஓமலூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம், பூசா ரிப்பட்டி, நடுப்பட்டி, டேனிஸ்பேட்டை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப் போது அவர் பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இரண்டா வது செங்கலை கூட வைக்கவில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி கேட்டாரா? 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா எந்த வொரு வளர்ச்சியும் அடையவில்லை. இருள் சூழ்ந்த ஆண்டாகவே 10 ஆண்டுகள் இருந் தது. 10 ஆண்டுகளில் நாட்டை எவ்வளவோ வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக் கலாம். ஆனால், மோடி அதற்கான நடவ டிக்கை எடுக்கவில்லை, என்று குற்றஞ்சாட் டினார்.
அணைகட்டிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
நாமக்கல், மார்ச் 28- ஜேடர்பாளையம் படுகை அணை கட்டிலிருந்து ராஜவாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவே லூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியிலிருந்து ராஜ வாய்க்கால் பராமரிப்புப் பணிக்காக கடந்த பிப்.20 ஆம் தேதி தண்ணீர் நிறுத் தப்பட்டது. அதன்பிறகு மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் தண்ணீர் திறந்து விடப் பட்டது. இந்நிலையில், ஜேடர்பாளை யம் காவிரி ஆற்றில் படுகை அணைக் கட்டு பகுதிக்கு தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால், ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப் போவதாக பொதுப் பணித்துறையினரின் அறிவிப்பால் விவ சாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனர். ராஜா, கொமராபாளையம், பொய் யோரி மற்றும் மோகனூர் உள்ளிட்ட வாய்க்கால் பாசனத்தை பயன்படுத்தி வெங்கரை, ஜேடர்பாளையம், பொத்த னூர், பாண்டமங்கலம், வேலூர், அனிச் சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் வெற் றிலை, வாழை, கரும்பு போன்ற பயிர் களை சாகுபடி செய்துள்ளனர். இந்நி லையில், தண்ணீர் திடீரென நிறுத்தப் பட்டால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற் படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளி யன்று காலை வரை தண்ணீர் நிறுத்து வதை பொதுப்பணித்துறையினர் ஒத் திவைத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை யினர் கூறுகையில், காவிரி ஆற்றில் குடிநீர்த் தேவைக்காக திறந்துவிடப் பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்ல வில்லை. கடைமடை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் காவிரியில் கடைமடை வரை தண் ணீர் சென்ற பிறகு ராஜவாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும், என்ற னர்.
அக்காவை கொலை செய்த தம்பிக்கு ஆயுள்
அக்காவை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தருமபுரி, மார்ச் 28- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லைச் சேர்ந்தவர் ராஜம் மாள் (56). அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய தம்பி காமராஜ் (54) மீன் பிடிக்கும் தொழிலாளி. ராஜம்மாளுக்கும், காமராஜுக்கும் நிலம் தொடர்பாக சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜன.27 ஆம் தேதி காமராஜ், தனது அக்கா ராஜம்மாளை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதையடுத்து ராஜம் மாளை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராஜம்மாள் பரிதாப மாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், விசாரணையின் முடிவில் காம ராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து காமரா ஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபரா தம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.